தியானம் என்பது நம் மனதையும் உடலையும் உற்சாகப்படுத்த பெரிதும் உதவுகிறது. தியானம் உங்க எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தி நினைத்ததை சாதிக்க உதவி செய்யும். உங்க தியானத்தின் மூலம் எந்த மாதிரியான நன்மைகளைப் பெற முடியும் இதை எப்படி செய்யலாமென அறிவோம்.
நம்முடைய மனநிலையை மேம்படுத்துவதில் தியானம் ஒரு மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. தியானம் மேற்கொள்ளும் நபர்கள் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளைப் பெறுகின்றனர். இது உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும்.
தியானம் என்பது மனரீதியான தெளிவான உணர்ச்சிபூர்வமான நிலையை அடைவதாகும். பண்டைய காலங்களிலிருந்து உலகம் முழுவதும் பல கலாச்சாரங்களில் தியானம் நடைமுறையில் உள்ளது. தியானத்தின் பயிற்சி, பல்வேறு நிலைகள், வகைகள் மற்றும் துணை வகைகளை உள்ளடக்கியது. தியானத்தின்போது உங்க எண்ணங்களைச் சுதந்திரமாக ஓட விட வேண்டும். தியானத்தின் நன்மைகள் உங்க மனதையும் உடலையும் பலப்படுத்தும். இது மனதை தளர்த்தும். சரி வாங்க அறிவியலின் படி தியானத்தின் நன்மைகளை நாம் அறிந்து கொள்வோம்.
மன அழுத்தத்தைக் குறைக்கிறது
இது பதட்டத்தை நிர்வகிக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. சுய விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துகிறது. இது செறிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. வயதான காலத்தில் ஏற்படும் மறதி பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது.
தியானம் உங்க மனதை அமைதிப்படுத்தும்
தியானத்திற்கு பிறகு நீங்கள் பெறும் நிதானமான உணர்வு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதயத் துடிப்பை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சுவாசம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஒரு வகையான மனம்-உடல் மருந்தாகக் கருதப்படும் தியானம் உடல் மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்தக்கூடும்.
ஆனால் தியானம் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. உங்க எண்ண அலைகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நம் அன்றாட பிஸியான வாழ்க்கை முறையில் அமைதியான நேரத்தைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இருப்பினும் ஆரம்பத்தில் நீங்கள் தியானத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றால் அதற்கான சில எளிய முறைகள் இதோ...
நீங்கள் தியானிக்க உட்கார்ந்தால் உங்கள் மனம் சுதந்திரமாகவும் எல்லா எண்ணங்களிலிருந்தும் விடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. மெதுவாக உங்க மனதை அதற்குப் பழக்கப்படுத்த வேண்டும். உங்க மனதுக்கு கற்பியுங்கள். ஒன்றன் பின் ஒன்றாகச் சிந்திக்க வேண்டும்.
முதலில் தியானம் செய்வதற்கு வசதியான நிலையில் உட்காருவது அவசியம். சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து இருங்கள். நீங்கள் தரையிலோ அல்லது நாற்காலியிலோ உட்காரலாம். நீங்கள் குறுக்கு கால் போட்டோ அல்லது எந்த நிலை உங்களுக்கு வசதியாக உள்ளதோ அந்த நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.
உங்க சுவாசத்தை கவனியுங்கள்
இது ஒரு எளிய செயல் மட்டுமல்ல தியானத்தில் முக்கியமான செயலும் கூட உங்க சுவாசத்தை கவனியுங்கள். உங்க வாய், வயிறு அல்லது மூக்கு வழியாகக் காற்று செல்வதை கவனியுங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து உங்க வயிற்றை விரிவடைய செய்து மெதுவாக வெளியே விடுங்கள். 2 நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
உங்க நேர அளவை திட்டமிடுங்கள்
ஆரம்பத்தில் தியானத்தில் ஈடுபடுபவர்கள் நேர வரம்பை நிர்வகியுங்கள். எடுத்த எடுப்பிலேயே நீண்ட நேரம் தியானத்தில் உட்கார்ந்தால் பிறகு அதிக சோர்வாகிவிடுவீர்கள். ஆரம்பத்திர் 5-10 நிமிடங்கள் எனத் தொடங்கி, நேர வரம்பை நிர்வகிக்கவும். உங்க நேரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுங்கள்.
உங்க மனதை கட்டுக்குள் வையுங்கள்
தியானத்தின்போது உங்க மனம் அலைந்து திரிந்தால் கவலைப்பட வேண்டாம். உங்க மனம் மற்ற இடங்களில் கூடக் கவனம் செலுத்தலாம். கவனச் சிதறல் ஏற்படலாம். உங்க கவனம் அலைந்து திரியும்போது உங்க மூச்சின் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள் அவசரப்பட வேண்டாம். விழிப்புணர்வுடன் உங்க சுவாசத்திற்கு திரும்புங்கள்.
செயலில் கற்பனை கொண்டவர்களுக்கு இது உதவியாக இருக்கும். இது உங்க தியானத்தின் தரத்தையும் கவனத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் விரும்பும் எண்ணங்களைக் காட்சிப்படுத்துங்கள்.
உங்க குரலைப் பயன்படுத்துங்கள்
தியானத்தின்போது மந்திரங்களை ஓதுவது சிறப்பாகக் கூறப்படுகிறது. தியானத்துடன் தொடர்புடைய பிரபலமான மந்திரம் என்று பார்த்தால் ஓம் என்பது தான். ஓம் என்று சொல்லும்போது அது உங்க மனதுக்குள்ளே ஒரு அமைதியான உணர்வை ஏற்படுத்துகிறது.
உங்க தியான அமர்வை முடிக்கும்போது மெதுவாகக் கண்களைத் திறந்து உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் அவதானிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்க உணர்ச்சி, உடல் மற்றும் எண்ணங்களைக் கவனியுங்கள்.
தியானம் செய்ய உதவிக் குறிப்புகள்
ஒவ்வொரு சுவாசத்தையும் 1 முதல் 10 வரை எண்ணலாம், நீங்கள் 10 ஐ அடைந்ததும் மீண்டும் தொடங்கவும். நீங்கள் எப்போதும் உட்கார்ந்து தியானிக்க வேண்டியதில்லை, படுத்துக் கொள்ளுங்கள் அல்லது யோகா நித்ரா நிலையில் கூட நீங்கள் தியானிக்கலாம்.
இந்த நுட்பத்துடன் தூங்குவது மிகவும் இயல்பான ஒன்று. உங்க உடலில் கவனம் செலுத்துங்கள் (தோரணை மற்றும் ஆற்றல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்). தியானிக்க சிரமப்பட வேண்டாம். மனதையும் உங்க உடலையும் ஒரே இடத்தில் உட்கார வையுங்கள். 45 நிமிடங்களுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு முறை தியானிப்பதற்கு பதிலாக, உங்கள் இலவச நேரத்தைத் தேர்வு செய்து 5-10 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் தியானிப்பது சிறந்தது.
தியானத்தை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். வழக்கமாகத் தியானம் செய்து வருவது உங்க வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மனதையும் உடலையும் உற்சாகப்படுத்தவும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தியானம் என்பது ஊக்குவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக