வெள்ளி, 31 ஜூலை, 2020

வேண்டாம் புதிய கல்விக் கொள்கை 2020 - Part 2

  • ஆசிரியர்கள் பதவி உயர்வில் இனி திறமை மற்றும் ஆர்வம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இத்தனை நாள் கட்டமைத்த சமூக நீதியின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்க முடிவு பன்னிட்டாங்க. இனி சொம்பு ஜால்ரா எல்லாமே உயர்பதவியில் நூல் கொண்யடு இருக்கும்.





  • கல்வி நிலைய உயர்பதவிகளில் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்த நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். எதுக்கு சுத்தி வளைச்சுட்டு நேரா சொல்லிடுங்க லைக் கார்ப்பரேட் வீ ஆர் கோயிங் டூ கிவ் ப்ரமோஷன்.




  • போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக நேர்முகத்தேர்வும் வகுப்பறை கற்பித்தல் தேர்வும் நடைபெறும் . லஞ்சம் , செல்வாக்கு விளையாடப்போகும் இடம்.




  •  இப்போது இருக்கும் பி.எட் பாடமுறை 2030 வரை மட்டுமே. அதன்பிறகு 4 வருட ஒருங்கிணைந்த பி.எட் பட்டமாக மாற்றப்படும். இனி எவனும் வரமாட்டான் பி.எட் படிக்க.




  • மூன்றாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் விருப்பபாடம் மட்டுமே. இங்கிலீஷ் படிச்சுட்டு நீங்க எப்படி வெளிநாடு போலாம். இங்கேயே ஆடு மேய்ங்கடா பரதேசி பசங்களா.




  •  யூஜிசி இனி உயர்கல்வி மானியதுறை. MHRD இனி உயர்கல்வி துறை அமைச்சகமாகிறது. மனிதவள மேம்பாடு அவுட்



  • ஆய்வு மானியங்களில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமவுரிமை. அம்பானி அதானி யுனிவர்சிட்டி ஆரம்பிச்சு மொத்த கிராண்ட் வாங்கிடுவாங்க இங்க ஸ்டேட் யுனிவர்சிட்டி லாம் நக்கிட்டு போக வேண்டியதுதான்.





  • மேலோட்டமாக பாத்தா நல்லா இருக்கமாதிரி தெரியும் இனி மதிப்பெண் சான்றிதழ் மாநில அரசு வழங்கும் ஆனால் மதிப்பெண் இணையாக்கம் மத்திய அரசுதான் செய்யும். இப்படி எல்லா விஷயத்திலும் தென்மாநிலங்களில் வடக்கு உள்புகும். உரிமை பறிபோகும்.  வசதிகள் குறையும். இந்தியா முழுவதும் பீகார் போல ஆகும்.






 இதெல்லாம் சாம்பிள் தான். இன்னும் பெரிய துரோகங்கள் இருக்கிறது. இதேபோல் அனைத்தையும் எடுத்துக்கொள்ளும் கடவுளின் கைகளில் நாடு சிக்கிக்கொண்டது.



 இனி கட்டைவிரலுடன் உயிர் முழுவதும் கேட்காமலே உங்களிடமிருந்து பிடுங்கிக்கொள்ளப்படும். கவலை மட்டும்தான் மிச்சம். இதை எப்படி நிறைவு செய்வது என்று கூட தெரியவில்லை‌.



 நம் தலைமுறைகளின் அழிவு நம் கண்ணெதிரே நிகழப்போகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக