செவ்வாய், 27 ஜூலை, 2010

அடி எண்டா இது அடி(அரசியல் வாதிகள் டங்குவார் )

karthikeyan


சில விஷயங்கள் பெரிய மனுஷன் பண்ணுற வேலையா எண்டு கேக்க தோணும். சில அரசியல்வாதிகள் அடி பட்டாலே பெரிய கொண்டாட்டம் . உலக தலைவர்களே அடி பட்டுகொண்டால் . என்ன சின்னப்புள்ளத்தனமா ?



அடி எண்டா இதுகள் அடி...

துருக்கி



மெக்ஸிகோ (பயபுள்ளை மீசை மேல என்ன அவளவு ஆசை )



தென் கொரியா



உக்ரையின்





ரஷ்யா



இலங்கை (என்ன எண்டு பாக்காதீங்க இவைகளும் அரசியல் வாதிகள் தான் )



சீனா



ஜப்பான்


இந்தியா



தாய்வான்



இத்தாலி



இந்த படங்கள் நிறைய யோசிக்க வைக்கும் சிரிப்போட ..

விண்ணை தாண்டி வருவாயா

karthikeyan


  பரீட்சை முடிந்த உடனேயே விண்ணை தாண்டி வருவாய் போறதெண்டு முடிவே பண்ணியாச்சு . நீண்ட கால எதிர்பார்ப்பு வேற , கவுதம் மேனன் படங்கள் என்றாலே வழமையாக உயிர் . எப்பிடியோ முதல் நாள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சிட்டுது. வந்த உடனேயே எழுதும் பதிவு

ஒரு வருட கால எதிர்பார்ப்பு. பூர்த்தி செய்திருக்கிறார் கவுதம் மேனன் . சிறந்த ஒரு ரசனையாளன் படைப்பாளி என தன்னை மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார் . நிறைய காலத்திற்க்கு பின் ஒரு சிறந்த படைப்பு விண்ணை தாண்டி வருவாயா.உண்மையிலேயே விண்ணை தாண்டி விட்டார் கவுதம் மேனன்



முதலில் இருந்தே கவுதம் மேனன் படங்கள் என்றாலே காட்சி அமைப்புகள் தான் நினைவு வரும் . எதிர் பார்ப்பை தாண்டி அருமையாக காட்சி அமைப்பு . முதலிலேயே விண்ணை தாண்டி வருவாயா கண்களுக்கு விருந்து .வழமை போலவே தனது பாணியில் யதார்த்தமான கதைக்கருவை கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.


கதை என்று பார்த்தால் யதார்த்தமாக உருவாகும் காதல் .தமிழ் பேச கூடிய மலையாள கிறிஸ்தவ பெண் திரிஷா , சிம்பு இந்து . சிம்புவின் லட்ச்சியமே படம் எடுக்க வேண்டும் என்பது . திரிஷாவோ படமே பார்த்ததில்லை. காதலில் ஜெயிக்க சிம்பு( கார்த்திக் ) செய்யும் வேலைகள் அனைத்தும் ரசிக்கத்தக்கன . பின்னர் திரிஷாவும்( ஜெசி ) காதலில் விழுகிறார் . இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான். இருவரும் காதலிக்கிறார்கள் . சந்தர்ப்பம் உறவுகள் வழமை போல காதலை பிரிக்கின்றன .



இறுதியில் உண்மைக்காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஜெயித்தார்களா ? யதார்த்தம் ஜெயித்ததா ? என்பதை உண்மையாக மிக மிக வித்தியாசமான பாணி யதார்த்தமான காட்சி ஓட்டங்கள் வைத்து பூர்த்தி செய்திருக்கிறார் .படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். சினிமா காதலையும் உண்மையான காதலையும் ஒப்பிட்டு அருமையான விளக்கம்.

காதலின் குழப்பம் நிறைவாக காட்டப்பட்டுள்ளது .

காதலர்களுக்கு இடையே காதலில் ஏற்ப்படும் பிரச்சனைகள் , குழப்பங்கள் நம் கண் முன்னே அப்படியே . நான் ஏன் ஜெஸ்ஸி ய லவ் பண்ணேன் தெரியுமா என சிம்பு அடிக்கடி கேட்பது உருக வைக்கிறது .அனைவரும் கூடுதலாக நமக்கிடையே கேட்டுக்கொள்வது தான் . திரிஷா குழம்புவதும் மீண்டும் காதல் ஏற்ப்படுவது யதார்த்தம் .
ஒவ்வொரு காட்ச்சிகளில் முன்னைய காட்ச்சிகளுக்கு விளக்கம் . அவற்றை தொடர்பு படுத்தி கோர்த்து கொடுத்த பாணி அருமை .



ஒளிப்பதிவில் மனோஜ் பின்னி எடுத்திருக்கிறார். கவுதம் மேனன் காட்சிகளில் குறை இல்லை என்பது படத்தை பார்த்தால் விளங்கும் . பாடல்களின் காட்சி அமைப்புகள் சில வெளி வந்தது தான். ஒவ்வொரு காட்ச்சியிலும் கதைக்கு ஏற்ப்ப தேர்ந்து எடுத்த இடங்கள் அனைத்தும் மனதில் . காதல் காட்ச்சிகளுக்கும் நெருக்கமான காட்சிகளுக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவு. முக்கியமாக கேரளா காட்ச்சிகள் கோவா , அமெரிக்கா காட்ச்சிகள் போன்றவற்றில் பின்னி எடுத்திருக்கிறார். இரவில் சிம்பு மதிலில் ஏறி இருக்கும் போது நிலவுடன் சேர்ந்து எடுத்த காட்ச்சிகளுக்கு சபாஷ் . சில காட்சி அமைப்புகளில் நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.

ஒலிப்பதிவு சொல்லவேண்டுமானால் தனியாக ஒரு பதிவே எழுதலாம். ரகுமான் இந்த படத்தில் முழுதாக ஒரு பாகம் . பின்னணி இசை பின்னி பெடல் எடுத்து விட்டார் . கிடார் வயலின் இசைப்பாடல்கள் ஆரோமலே , கண்ணுக்குள் கண்ணை வைத்து ஸ்பெஷல் . அனைத்து பாடல்களுமே சிறப்பு . மற்றைய பாடல்களும் அனைவருக்கும் இனி பிடிக்கலாம். பினனனியில் பியானோ , கிடார் இசைகள் பிளஸ் . ஆரோமலே புதிய இசை அறிமுகம் தரமாக .தாமரையின் வரிகள் பாடல்களுக்கு மேலும் மெருகு

முக்கியமாக கவுதம் படங்களில் கலை வடிவமைப்பாளர்கள் முக்கியமாக பாராட்ட பட வேண்டியவர்கள். ஒவ்வொரு காட்ச்சிகளும் சரி , நாயகன் ,நாயகி உடை வடிவமைப்புகளும் சரி அனைத்துக்கும் ஒரு சபாஷ் . கலை ரஜீவன் . ஆடை வடிவமைப்பு நளினி சிறிராம் . சிறந்த கற்ப்பனை . பொருத்தமான எளிமையான வடிவமைப்பு .



நாயகி திரிஷா(ஜெசி )
இது வரைக்கும் பார்த்திராத திரிஷா . எளிமையான உண்மையான நடிப்புக்கு பாராட்டுக்கள். இவ்வளவு அழகாக யாரும் திரிஷாவை சேலைகளில் காட்டியது கிடையாது .

நாயகன் சிம்பு (கார்த்திக் )
சிம்புவும் இதுவரை யாரும் பார்க்காத சிம்பு தான். கூடுதலானோருக்கு சிம்புவை பிடிக்கலாம். மிகவும் அமைதி ,எளிமை . எளிமையான தோற்றம் . கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடை வடிவமைப்புகளுக்கு முக்கிய பாராட்டுகள்.

கே எஸ் ரவிக்குமார் , சிம்புவுடன் இருக்கும் இயக்குனர் போன்றோரே வெளியானவர்களில் படத்தில் அடையாளம் காட்ட கூடியவர்கள். வேறு ஒருவரும் மனதில் நிற்க்கவில்லை.

சில வசனங்கள் ஜொலிக்கின்றன . திரிஷா காதலுக்கு சமயம் , மொழி ,அப்பா காரணம் காட்ட கடைசியா உன்னை எனக்கு பிடிக்கணும் என ஒரு காரணத்தையும் திரிஷா சொல்ல. இது காரணம் என்று சொல்லும் இடம் அருமை . தனக்கு திருமணம் நிச்சயித்து இருக்கு என்ன பண்ணட்டும் கார்த்திக் என்று திரிஷா சொல்ல " நீ ஒன்னும் பெர்மிஷன் கேட்டு வரேல்லையே பொய் கல்யாணம் பண்ணிக்க ஜெசி " என்று சொல்லி அனுப்பது மிக அருமை .



கவுதம் மேனனுக்கு எங்கிருந்து தான் இவளவு அருமையான ரசனைகளோ தெரியைல்லை. அவருக்கு அமையும் ஒளிப்பதிவாளர்கள் கலை வடிவமைப்பாளர்களுமோ தெரியவில்லை . ரகுமானின் இசை , ஓளிப்பதிவு, யதார்த்தம் , கவுதமின் அருமையான படைப்பு . இவை அனைத்தும் விண்ணை தாண்டி வருவாயா ஒரு படமல்ல யதார்த்தமான அழகான கண்ணீர் கவிதை என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் .

படத்தை பார்த்தால் கண்ணீரும் புன்னகையும் ஒரு நிறைவும் இருக்கும் .
மற்றைய இயக்குனர்களின் காதல் படங்கள் முழுவதும் பொய் என்றால் கவுதமிடம் யதார்த்தம் இருக்கும் .உண்மையான யதார்த்தமான காதலையும் காதலர்களையும் காட்டிய கவுதமிட்க்கு பாராட்டுக்கள் . சினிமா காதலையும் யதார்த்தத்தையும் சேர்த்த விதம் அருமை .

உண்மையில் விண்ணை தாண்டி வருவாயா தமிழ் சினிமா காதல்களில் மனதில் நிற்க்கும். விண்ணை உண்மையாக தாண்டிய கவுதமிட்க்கும் , ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் . ஒரு சபாஷுடன்....

பையா :

karthikeyan


 
நிறைய காலமா பதிவு ஒண்டும் போடேல்ல. பையா படம் பாத்திட்டு சூட்டோட சூடா  எழுதும் விமர்சனம்  . ஆனா படம் சுட்ட படமா சுடாத படமா எண்டு பாப்பம் .


விண்ணைத்தாண்டி  வருவாயாக்கு   பிறகு தியேட்டருக்கு போகலாம் எண்டு முடிவு பண்ண படம் . வந்த ஸ்டில்கள் , முக்கியமா இசைக்காக கட்டாயம் போகணும் எண்டு முடிவு பண்ணிய படம் .( டாடா சுமோ ரவுடீசை ஸ்டில்கள்ள  நான் பாக்கேல்லையே )


வழமையான தமிழ் சினிமா . காதல் படத்துக்குள் கொஞ்ச ஆக்க்ஷன்  எண்டு  போனா ஒரு ஆக்க்ஷன் படத்துக்குள்ள காதலை வேணும் எண்டே புகுத்தின மாதிரி இருக்கு . ஒரே வார்த்தையில் சொன்னா வழமையான தமிழ் சினிமா பாணியில் (முக்கியமா லிங்குசாமி பாணி ) அமுல் பேபி ஹீரோக்களை எருமைமாடுகள் போல இருக்கும் சும்மா ஒரு முப்பது பேரை அடிக்க வைப்பார் . சும்மாவா மாதவனையே ( ரன் ) அடிக்க வைச்சவர் ஆச்சே .

இது தானுங்க கதை . சுருக்கமா சொல்ல போனா வெட்டியா இருக்கும் நம்ம ஹீரோ கார்த்தி (சிவா ) க்கு பார்த்த உடனே காதல் . தமன்னா(சாரு ) மேல தான் .சந்தர்ப்ப வசத்தால கண்ணீர் சிந்தும் தமன்னாவை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு பிரயாணம் ஆரம்பிக்கிறது . இடையிடையே  சுவாரசியங்கள் . நகைச்சுவை இல்லாத குறையை சிலர் நிவர்த்தி  செய்கின்றனர் . மும்பையில் இருக்கும் நண்பன் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்கலாம் ( வேற யாரும் இல்ல  அயனில் சூர்யாவுக்கு துணையாக இருப்பவர் பெயர் யாபகம் இல்லை ). கடைசீல சேருவாங்களா இல்லையா இது தான் கதை . மிகுதியை போய் தியேட்டர்ல பாருங்க .


 அட சரி பிரயாணம் தொடங்குதே இடையில  ரொமாண்டிக்கா ஏதாவது இல்லாட்டி வித்தியாசமான அணுகு முறையோ  எண்டு ஒக்காந்தா வழமையான ரவுடீஸ். அதே வெட்டாத முடியோட . ஒவ்வொருத்தரும்  ஆறு அடி .  பிரயாணம் முழுக்க பின்னால துரத்திறாங்க . அப்புறம் எங்க படத்திலை அமைதி . காதல் . ஒரே சத்தம் .

படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே என்ன முடிவுன்னும் தெரிஞ்சு போச்சில்லை. அடுத்து என்ன என்ன சீன்ன்னும் கண்டு பிடிச்சிட்டோம்ல . எத்தனை தமிழ் சினிமா பாத்திருப்பம் . 

கார்த்தி நீண்ட காலத்துக்கு பிறகு அழகா .. கொஞ்சம் சிரிக்கிறார் . இன்னும் பருத்தி வீரன் முரட்டு தன்மை போகேல்ல போல . தமன்னா வழமை போல நடிப்பில் அருமை . ரொம்ப அழகா இருகாங்க வேற . இந்த முறை லிங்குசாமி உடைகள் இடங்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் .

முக்கியமா ஒளிப்பதிவாளர் மதி பாராட்ட பட வேண்டியவர் . அருமையான ஒளிப்பதிவு . ஆக்க்ஷன் சீன்களிலும் சரி , கார் சேசிங் சீன்களிலும் பின்னி எடுத்திட்டார் . அந்தோனி யோட எடிட்டிங்கும் கைகொடுத்திருக்கிறது . எடிடிங்க்ல ரவுடீஸ் எண்ணிக்கைய குறைக்க முடியாதா  ( நம்பும் விதமாக ) அன்டனி  சார் . சண்டை காட்ச்சியில் ஹீரோ  பறக்கும் சீன்களை சமாளிச்சு இருக்கீங்க எண்டு தெரியுது . 
பாம்பே வில்லன் இந்த படத்துக்கு பிளஸ் . சிம்பிளாக மிரட்டியிருக்கிறார் .


படத்தில் மிகப்பெரிய பிளஸ் யுவன் ஷங்கர் ராஜா சார் . எப்பவுமே கலக்கல் தான் . கோவா இசை எதிர் பார்ப்போட போனா , அதை விட அசத்தியிருக்கிறார் . எல்லா பாடல்களும் அருமை . அதுவும் "ஏதொ ஒன்று உன்னை கேட்க்க" திரையில் கேட்க்க மிக அருமை.  பின்னணி இசையும் அருமை . புதிதாக சேர்த்த பாடல் போல . ஒரே வார்த்தை மிக மிக அருமையான பாடல் . 


 "துளி துளி ", "அடடா மழை டா"," என் காதல் சொல்ல நேரம் இல்லை " போன்ற பாடல்கள் ஏற்க்கனவே ஹிட் . பிளஸ் "சுத்துதே சுத்துதே பூமி ".

கிளைமாக்ஸில் ஒரு சிறு மனதை தொடும் காட்சி . வழமையாக பிரயாணமோ வாழ்க்கையோ  நம்முடன் வருபவர்கள்  சிரிப்பாங்க  பழகுவாங்க  திடீரென சொல்லாமல் போயிடுவாங்க . அழகாக காட்டியிருப்பார் லிங்குசாமி . அந்த கற்பனைக்கு  பாராட்ட வேண்டும் .  அதற்க்கு "ஏதொ ஒன்று என்னை தாக்க " பின்னணியில் ஒலிக்கும் . 

காதலை கொஞ்சம் பயணத்தோடு அழுத்தமாக காட்டி இருக்கலாம் . பயணத்தை அழகாக காட்டி இருக்கலாம் . அனால் இந்த படத்தில் கொஞ்சம் லோகேஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் . சாலையோர நீர்  வீழ்ச்சி தேடி பிடித்திருக்கிறார் . 

ஆனால் காதல் என்ற விஷயத்துக்குள் ரத்தம் சிந்தவில்லை ,அதனால் பொறுத்துக்கொள்ளலாம் . சந்தர்ப்பங்கள் துரத்துகிறது எதிரியாகிறது . 

ஆக்க்ஷன், இசை  ரசிகர்களை திருப்தி செய்யும்  பையா . சுவாரசியமாக ஒரு முறை பார்க்கலாம் படம் . சில யதார்த்தம் இல்லாத விஷயத்தை யோசிக்காம விட்டால்... ( 30 பேரை ஒரு 6 சந்தர்ப்பத்திலை அடிச்சிருப்பரு ஹீரோ ).

பையா ஸ்டில்கள் மட்டும் நல்லம் .  கொஞ்சம் ரசனையோட காதலை கொஞ்சம் காட்ட முயற்ச்சி  பண்ணியிருக்கிறார் . ஆங்காங்கே தெரிகிறது . வாழ்த்துக்கள் .

ரவுடீஸ் விமர்சனம் 

பறக்கும் டாடா சுமோக்கள். வெட்டாத முடி . ஒரு கோழியை அப்பியே வேற சாபிடுறாங்க. வாகனத்தை விட்டு எட்டி பார்த்து கத்திக்கொண்டு வேற  . நாங்க பயந்துட்டோம்ல .... பாத்து பாத்து மரத்துப்போச்சு சார் ...

இன்னும் நிறைய இந்த மாதிரி படங்கள் லயின் ல நிக்கிறது தான் கவலை. சிங்கம் வரப்போகுதாம்ல . என்ன கொடுமை ?. ஸ்டில்களே கொடுமை !!!!!

அங்காடித்தெரு -

karthikeyan


  ஒரு மாதிரியாக அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தாகிவிட்டது. சில கேவலமான விமர்சனங்களும் நல்ல விமர்சனங்களும் வாசித்தாகி விட்டது . என்னத்தை சொல்லுறது விண்ணைத்தாண்டி வருவாயா போல உயர்ந்த ரசனை உழைப்புடன் அழகான நல்ல படம் வந்தாலும்(மேல்தட்டு வர்க்கமாம் !!) பிடிக்கேல்ல . அங்காடி தெரு(கீழ்த்தட்டு  வர்க்கமாம் !!) போல எளிமையான உருக்கமான உண்மையை கூறும் கதை வந்தாலும் பிடிக்கேல்ல எண்டா என்ன தான் பண்ணுறது ..(எத்தனை தமிழ் படம் எடுத்தாலும் திருந்த மாட்டானுங்க )


எவ்வளவோ திரைப்படங்கள் வந்தாலும் சில படங்கள் தான் மனதை தொடும் . அங்காடித்தெரு நிலைத்திருக்கிறது . உணர்வை தொடும் படம் . அனைவரும் பார்க்க வேண்டிய படம் .


மிக மிக நெஞ்சை தொட்ட வசனம் . "மனுஷங்க தான் தீட்டு பாப்பாங்க  கடவுள் இல்லை "
என்று நாயகன் சொல்லும் இடம் அருமை . ஆச்சாரியமான மாமியும் கொடுமை பண்ணுது ஓய். தான் மந்திரம் பூஜைகள் செய்வதாகவும் வேலை பார்க்கும் வயதுக்கு வந்த சிறுமியை( நாயகியின் தங்கை ) வீட்டிற்க்குள் வைத்திருக்காமல் நாய் கூட்டிட்க்குள் வைத்திருப்பது கொடுமை . ( ஆனா உண்மை ).

வசந்தபாலன் ஏற்க்கனவே வெயிலில் அசத்தியவர் . சிறந்த இயக்குனர்களை இயக்குனர் ஷங்கர்   ஊக்குவிப்பது உண்டு . இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளி வந்த படம் தான் வெயில் . ஒவ்வொரு உறவுகளின் உணர்வுகளையும் சரியாக பிரதிபலித்த படம் . அங்காடி தெருவில் எவ்வாறு அந்த கடை மேற்பார்வையாலரோ அதே போல வெயிலில் நாயகர்கள்  தந்தை .

கொஞ்சம் அருவருப்பான வில்லன்(  நல்ல படங்களை  வரவேற்காதவர்கள் ) பாத்திரங்களாக இருந்தாலும் இவ்வாறான  பாத்திரங்கள் நிஜத்திலும் உலாவுகின்றன. 

அங்காடித்தெரு போலவே கொழும்பிலும் பல தெருக்கள் உண்டு . பணக்கஷ்டம் குடும்ப கஷ்டம் காரணமாக எத்தனையோ பேர் இவ்வாறான  நெரிசலான கடைகளில் ( புடவைக்கடைகள் , நகைக்கடைகள் )  வேலை பார்க்கின்றனர்.  பல நண்பர்களும் தெரிந்தவர்களும் அங்கு இருப்பதால் இவ்வாறு பெரிதாக துன்புறுத்தல் நடப்பதில்லை என்பது அறிந்த உண்மை . ஆனால் சுரண்டல்கள் இல்லை என்று அடித்து கூற முடியாது . முதலாளி வர்க்கங்கள் (சிலர் ) உழைப்பாளிகளை சுரண்டி உண்பதுண்டு . எம்மிடம் அரசாங்கம் சுரண்டுவது வேறு விஷயம் . இடங்கள் வேறு ஆனால் விஷயம் ஒன்று தான் . மனித உரிமைகள் இல்லை . சுரண்டல்கள் உண்டு .

இந்த படம் வந்த பின்பு பல மனித உரிமை அமைப்புகள் கடைகளில் தேடுதல் நடத்தியதாகவும் பலர் பிடி பட்டதாகவும் கேள்விப்பட்டேன் . இயக்குனருக்கு வாழ்த்துக்கள் .



அன்றாட வாழ்விட்க்காக கஷ்டப்படும் உழைப்பாளி வர்க்கத்தினரின் கதை . சன நெரிசல் மிக்க கடைத்தொகுதிகளில் வேலை பார்ப்பவர்களின் கஷ்டங்கள்.  தனியே  கொடுமைகளுடன் காட்டாமல் இடையில் காதல் ,சிறு சிறு கதைகள் வைத்து திரைக்கதையை தொய்வில்லாது கொண்டு சென்றுள்ளார் வசந்தபாலன் . 

முக்கியமாக இந்தப்படத்தில் வந்த சிறு சிறு பாத்திரகளின் நிகழ்ச்சிகள் நெருக வைத்தன. நம்பிக்கை ஊட்டிய அந்த பாத்திரங்கள் மனதில் நிற்க்கிறது .

பழைய ஆடைகளை துவைத்து அயன் செய்து பத்து ரூபாயிட்க்கு விற்கும் இளைஜன் என நிறை அயிடியா  வேறு .
 பசியால் வாடும் ஒருவன் கழிப்பறையை சுத்தம் செய்து வெளியில் இருந்து 1 ரூபாய் பணம் சேகரிப்பது . சரியில்லாத நடத்தை கொண்ட பெண் குள்ளமான ஒருவரை(  அவளது பாதையை மாற்றியவரை ) திருமணம் செய்து வாழ்வது . அவர்களுக்கு ஊனமாக( மாற்றுத்திறன் உள்ளவர்கள் ) குழந்தை பிறக்கிறது. அதை பார்த்து தாய் சந்தோஷப்படுவது ஓகே . ஆனால் அந்த குழந்தை வாழ்க்கை என்னாவது ?? இவ்வாறான   சில கேள்விகளுக்கு விடை தேடினால் கருணைக்கொலை நல்லது எனப்படும் .

நாயகன் வாழும் இடம் , வேலை செய்யும் கடையில் உணவு பரிமாறல் போன்றன மற்றயது அந்த மேற்ப்பார்வையாளர் பண்ணும் அதி பயங்கர கொடுமைகள் என காட்ச்சிகளை தான் சிலர் மிகைப்படுத்தப்பட்டு உள்ளது என்கிறார்களோ. என்னுடைய கணிப்பின் படி உண்மை தான் காட்டப்பட்டுள்ளது . ஆனால் எல்லோரிடமும் அந்த கொடூரமான  முதலாளித்துவம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.


நாயகன் தனது எளிமையான நடிப்பால் அசத்தியுள்ளார் . பக்கா  கிராமத்து பையன். அவனுடைய நண்பனாக வரும் கனாக்காலும் காலங்களில் நடித்த பாண்டி நகைச்சுவையில் கலக்கல் . சில இடங்களில் நடிப்பும் பிரமிக்க வைக்கிறது . உருக்கமான காட்ச்சிகளில் அசத்தியுள்ளார் . 

நடிகையிடம் ஒரு குறும்புத்தனம் ஒட்டியபடியே இருந்தது . பின்னர் உருக்கமான காட்ச்சிகளில் சற்று நடித்துள்ளார் . இருக்கிற நடிகைகளின் நடிப்பை விட பெட்டெர் என்றே தோனுகிறது . 

இடையில் நாயகன் நாயகியின் தோழர்களுக்கு இடையே நடக்கும் காதல் சூபர்வயிசருக்கு
 தெரியவர சூபர் விசர்( சாரி சூபர்வயிசர்) பண்ணும் அட்டகாசம் தாங்க முடியேல்ல . தைரியமாக இருக்கும் பெண் , கோழைத்தனமாக ( குடும்ப கஷ்டததாலயாம் ) தான் காதலிக்கவில்லை என்று சூபர் வயிசருக்கு பயந்து சொல்லும் இடம் , உடனே அந்த பெண்ணின் நடிப்பு வசனங்கள் போன்றன யதார்த்தம் .

பெண்களுடன் தரக்குறைவாக நடக்கும் சூபர் வயிசறை பழி வாங்க நாயகனும் பாண்டியும் 
 மாடியில் இருந்து பொதியை போடும் காட்சி ஜாலி . எமக்கும் சந்தோசம் தான் .
பாண்டி காதல் கடிதம்( கடவுள் வாழ்த்து  ) எழுதி ஒரு பென்னிட்ட்கு கொடுப்பது ரசிக்க வைத்தது . கவிதை எழுத படும் பாடு . பாண்டியின் முக பாவங்கள் அருமை .

இதில் ஒன்றும் யாரும் வாழ்க்கையில் சொல்லாத வசனங்கள்  இல்லை . அருவருப்பான வசனங்கள் பாவிக்கப்படுவதால் அப்படியே காட்டப்பட்டுள்ளது . என்ன குடும்பமா போன முகம் சுளிக்க  வைக்கும் . குறைச்சிருக்கலாம் .

இறுதியாக காதலி (கவி ) ஊனமாகிய பின்னும் ,, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம என்ற இடம் கலங்க வைக்கிறது . 


பின்னணி இசையை விஜய் அந்தோனி கொஞ்சம் அள்ளி தெளிச்சிருக்கலாம் . படத்தில் பெரிய குறை பின்னணி  இசை. உணர்வுகளை இன்னும் ஆழமாக பிரதிபலித்திருக்கும் .

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ஏற்க்கனவே ஹிட் . உன் பேரை சொல்லும் போதே பாடல் எளிமையான அருமை . பாடல்கள் இரண்டும் தூக்கி நிறுத்துகிறது .

இடையில் ஸ்னேஹா வேற வந்து போறாங்க ( எதிர்பாக்கேல்லீங்கோ ).

பெரிய சந்தேகம் ???? முருகன் ஸ்டோர்ஸ் ( முருகனுக்கு ஒத்த பெயரா உள்ள வேற கடையா ) 
ஸ்னேஹா  விளம்பரம் ??? 
முதலாளி விளம்பர படம் எடுக்க அயிடியா கொடுக்கும் இடங்கள் எல்லாம் ஸ்னேஹாவே   நடந்ததை சொல்லி இருப்பாவோ ??    

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்- விமர்சனம்


  நீண்ட காலத்துக்கு பிறகு ஒரு ஒழுங்கான மகிழ்ச்சியான(வயிறு குலுங்க ) திரைப்படம் பார்த்த அனுபவம் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் . உண்மையிலேயே வைச்ச குறி தப்பேல்ல மாமு .



வழமையாக நகைச்சுவையுடன் கருத்துக்களை அள்ளி வழங்கும் இயக்குனர் சிம்புதேவன் படங்கள் வரிசையில்(23 ஆம் புலிக்கேசி , அறை எண் 305 இல் கடவுள் )  இன்னொரு வெற்றிப்படம். அரசியல் கருத்துக்கள் , தமிழர் பிரச்சனைகள் பற்றிய வசனங்களும்  பஞ்சமில்லை.

பிரபல முன்னணி நடிக நடிகைகள் மனோரமா , டெல்லி கணேஷ் , நாசர் , வி.எஸ் ராகவன் போன்றோரும் நமக்கு வழமையாகவே பிடித்த எம் எஸ் பாஸ்கர் , வையாபுரி , ரமேஷ் கண்ணா என பெரிய நகைச்சுவைப்பட்டாளம். இவர்களுடன் லாரென்ஸ் ,சந்தியா , பத்மப்ரியா , லட்சுமி ராயும் பாத்திரங்களில் நிறைவு . இடையில் வி எஸ் ராகவனை மட்டும் காணவில்லை.

36 வருடங்களுக்கு பிறகு ஒரு கௌபாய் திரைப்படம். ஜெய்சங்கர் இதற்க்கு முதல் ஒரு கௌபாய் படம் நடித்திருந்தார். இந்த கௌபாய் கதை நடக்கும் இடத்தின் பெயர் ஜெய் ஷங்கர் புறம் . ஆரம்பத்தில் கௌபாய் வரலாறு சினிமா நடிகர்களை வைத்து கூறுவது அருமை.


படத்தின் கதை(ஒரு புனை  கதையாக ) என்று பார்த்தால் கௌவ் பாய்(தமிழ்)  காலத்தில் நடக்கிறது .லாரென்ஸ் வைரம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்கு செல்லும் போது சிலரால்(வேறு கௌபாய் குழு ) காப்பாற்றப்படுகிறார். காரணம் அவர்கள் இனத்தலைவன் சிங்கம் போன்றவன். அந்த  இனத்தலைவனை
 இழந்து துடிக்கும் மக்கள்  வலுவிழந்து இரும்புக்கோட்டையில் இருக்கும் கிழட்டிடம் (நாசர் ) அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர் . அதனால் அம்மக்களை புரடச்சிகொண்டு எழ வைக்க(இரும்புக்கோட்டைக்கு எதிராக ) சிங்கம் போலவே உள்ள லாரென்சிடம் நீ சிங்கமாக நடித்தால் அதே போல உள்ள வைரத்தை தருகிறோம் என்கின்றனர் . உண்மையான சிங்கம் வீரன் அவளவு தான் வித்தியாசம் . இறுதியில் இரும்புக்கோட்டைக்கும் முரட்டு சிங்கத்திட்க்கும் நடக்கும் யுத்தம் இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதை கலகலப்பாக காட்டியுள்ளார் சிம்புதேவன் .


திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் சில நீட்ச்சிகள் தெரிந்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து இல்லாமல் பண்ணி விடுகின்றனர் . அதுவும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் மக்களுக்கு தேவையான கருத்துகளில் பின்னி பெடல் எடுத்து விட்டார் சிம்புதேவன் .

பின்னணி இசையை  ஜி வி பிரகாஷ் சரியாக செய்துள்ளார் . பாடல்கள் ஒன்றும் பெரிதாக ஹிட் ஆகா விட்டாலும் காட்ச்சியுடன் கேட்ப்பதட்க்கு நன்றாக உள்ளது . ஒளிப்பதிவாளர் அழகப்பன் குதிரைகளில் செல்லும் காட்ச்சிகள் , லாறேன்சின் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் போன்றவற்றில் நான்றாக செய்துள்ளார் .

விஷுவல்  பீட்டர் போல் . துப்பாக்கி சுடும் காட்சி , கார்ட்ஸ் விளையாடும் காட்சி என விஷுவலில்  விளையாடி உள்ளார் .

பாஸ்கர் செவ்விந்திய தலைவனாக வருகிறார். சந்தியா அவர் மகள் . பாஸ்கர் க்கு மொழி பெயர்ப்பாளர் ஆக வருபவர்( ஜாவா சுந்தறேசனாக  அறை எண் 305 இல் வருபவர் ) மொழி பெயர்ப்பில் பாஸ்கர் போலவே உடல் அசைவையும் மொழி பெயர்க்கும் போது  சொல்வது அசத்தல் .


3 நடிகைகள் வந்தாலும் இந்த உடைகளில் மிகவும் அழகு. பதம்ப்ப்ரியா லாறேன்சின் காதலியாக வருகிறார் . லட்சுமி ராய் நாசருடன் இருக்கிறார் . இடையில் சந்தியாவையும் சந்திக்கிறார் . நாயகிகளுக்கு பஞ்சமில்லை .



வயிறு குலுங்க சிரிக்க , சிந்திக்க வைத்த வசனங்கள் தான் படத்தின் பிளஸ். சென்சார்ல தியேட்டர் ல இருக்கிற ரீலை எடுத்து வெட்டாமை விட்டா சரி டோய் . ஏகப்பட்ட மறைமுக நக்கல்கள் . அரசியல் வாதிகள் மக்களின் நிலையை புட்டு வைச்சிடாருப்பா.

நின்றய காட்ச்சிகளும் கூட.. போய் பார்க்கும் போது உற்று கவனிக்கவும் .

ஐயருக்கு கௌபாய் தொப்பி ரொம்ப ஜில்லாலங்கிடி .. குறும்பு சிம்புதேவன் . அதுவும் குகை திறக்கும் வாசலில் கல்லில் ஜவுளிக்கடை விளம்பரம் இட்டிருப்பது கடியோ கடி .

படத்தில் புதையல் எடுப்பதற்க்கு குகைக்குள் செல்வதற்க்கு துண்டு சீட்டில் கேக்கப்பட்டிருக்கும் கேள்விகளும் பதிலும் .

தமிழில் எத்தனை எழுத்துக்கள் ? -
லட்ச்சுமி ராய் - 33
அந்த அம்மா சொல்லுறது நடக்காது டோய் .. ( 33 %  இட ஒதுக்கீடு.. லொள் )

 பொங்கு தமிழனுக்கு   பிரச்சனை வந்தால் என்ன செய்வோம் ?
A . ஆக்ரோஷமாக கிரிக்கெட் பார்ப்போம்
B . சினிமாவுக்கு போய் பாலாபிஷேகம் பண்ணுவோம்
C . டீக்கடையில் ஒக்காந்து வெட்டி பேச்சு
D .கலக்கப்போவது யாரு

இடையில் வரும் வாசங்களும் பஞ்ச் :
 நாசர் பேசும் வசனங்கள்  :- "தமிழனுக்கு பிடிக்காத வார்த்தை சுய உரிமை "  

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை புரட்சி  என்பன செம கடி .


தமிலன்ல ஒருத்தனுக்கு பிரச்சனைனா இன்னொருத்தன் வர மாட்டான் .. அது தெரிஞ்சு தானே இரும்புக்கோட்டையை   இங்க கட்டியிருக்கேன் என நாசர் சொல்லுமிடம் சூபர் .

மொத்தத்தில் சொல்ல  வந்ததை சொல்லி முடித்திருக்கிறார் சிம்புதேவன் . மனுஷன் பெருசா கதைக்காட்டியும் செயல்ல காடீடுப்பா ..karthikeyan

சிங்கம் - திரை விமர்சனம்

karthikeyan


  நிறைய நாட்களாக ஒரு நல்ல கமெர்ஷியல் படம் பார்க்கவில்லை என்கிறவர்களுக்கு ஹரி கொடுத்திருக்கும் இன்னொரு மெகா ஹிட் திரைப்படம் சிங்கம் . சனி,  ஞாயிறு தமிழ்  ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இந்த படம் அமையும் . சன் பிக்சர்ஸ் க்கும் ஐங்கரனுக்கும் இன்னொரு 200/100 நாள் திரைப்பட வரிசையில் இணையும் .



ஒரே கதையோ அல்லது ரவுடி கதைகளோ அதில் திரைக்கதை என்பது  மிக மிக முக்கிய பங்கு என நிரூபித்திருக்கும் ஒரு படம் . ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இருந்த இடத்தை விட்டு எழும்ப விடாமல் வைத்திருக்கும் அளவு திரைக்கதை சுவாரசியம் . இடை வேளையின்  பின்பு திரைக்கதையின் வேகம் இன்னமும் அதிகம் . அது ஹரியின் ரகசியம் . 

முதல் ஆரம்ப காட்ச்சியிலேயே எதுக்கு துவக்கு வைச்சு கொண்டு சண்டை பிடிக்கிறார், ரவுடிகள் பறக்கிறான்களே என்று கேள்வி எழுந்தாலும் அந்த படத்திற்கு அவர் உடலை தயார் செய்திருக்கும் விதம் பார்க்க இவரு அடிக்கலாம் என்று எண்ணத்தோன்றும் .

போலீஸ் வேலையிலேயே விருப்பமில்லாத ஊர் மக்களுடன் அன்பாக இருக்கும் சூர்யா  (துறை சிங்கம் ) எவ்வாறு நெல்லூரில்(கிராமம் ) இருந்து திருவான்மியூர், ஆந்திரா வரை செல்கிறார் , இறுதியில் எப்படி ஸ்பெஷல் அதிகாரி ஆகிறார்  என்பது இயக்குனரின் கைவண்ணம். இது கதையின் கரு. இவருக்கு இடையில்  என்ன என்ன பிரச்சனை வருகிறது , அதற்க்கு யார் காரணம் என  மிகுதியை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .


இந்த படத்தை திரைக்கதையோடு சேர்த்து தூக்கி நிறுத்த சூர்யாவின் உழைப்பு படத்தில் பார்த்தால் தெரியும்  . அந்த கம்பீரமும் , வீரமும் போலீசுக்கு உரிய ஸ்டையிலில் பின்னி இருக்கிறார் . இளைஞர்கள் மனதில்  இன்னொரு மூன்று முகம்  ரஜனி வந்துவிட்டார் என்று எண்ணத்தோன்றும் . 

சூர்யாவுடன் சேர்ந்து படத்தை தூக்கி நிறுத்திய பங்கு நாசர் , பிரகாஷ் ராஜ் க்கு போய் சேரும். கில்லியில் பார்த்த அதே முகம், கோபம், நடிப்பு பிரகாஷ்ராஜை மகா நடிகனாக்குகிறது .  

முக்கியமாக நாசர்(அனுஷ்காவின் அப்பா ) போலீஸ் கானுக்கு பொன்னை கட்டி கொடுக்க மாடன் என முரட்டு பிடிவாதம் கவுரவம் பார்க்கும் இடங்களில் சபாஷ் போடலாம். என்ன ஒரு நடிப்பு . அதுவும் நீங்க கொடுத்த லயிசன்ஸ் காலாவதி ஆகிரிச்சாம் என்று அனுஷ்கா  சொல்லும் இடத்தில் கொடுப்பார் ஒரு ரி ஆக்க்ஷன். பின்னணியில் நாயகன் நீங்கள் நல்லவரா கெட்டவரா? டியூன் ஒலிக்கும் . ரசித்த காட்சி. 

லாஜிக்கில் பிழை இல்லாமல் அவளவு ரவுடிகளையும்  ஒரேயடியாக அடிக்காமல் பிளான் போட்டு தூக்குவதில் இயக்குனரும் ,அவரின்  திட்டமும், சூர்யாவின் நடிப்பும்  மிக மிக அருமை .காட்சிகள் அனைத்தும் திரைக்கதையின் வேகத்துடன் கச்சிதமான பொருத்தம் . முக்கியமாக எப் ஐ ஆரை கிழித்து போட கேட்க்கும் ரவுடியுடன் தானே எப் ஐ ஆரை கிழித்து போட்டு விட்டு எதுக்குடா எப் ஐ ஆரை கிழிச்சா ? என்று கேட்க்கும் இடம் கைதட்டல் .


தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை முதலில் கேட்க்க பிடிக்கவில்லை . தியட்டரின் காதல் வந்தாலே க்கு கிடைத்த ரெஸ்போன்ஸ் சூபர் . சிங்கம் போல நடந்து வரும் போது போடும் பின்னணி பாடல் "சிங்கம்" காட்ச்சியுடன் உண்மையில் சிங்கம் போலவே இருப்பார் சூர்யா  . வேறு எந்த பாடலும் தூக்கி நிறுத்தவில்லை . 

விவேக்கின் காமெடி ரெட்டை வசனங்களை(ஏன் இப்பிடி மாறினார் ) கொண்டு வந்தாலும்   சிரிக்க வைக்கிறார். போர்ட்டர் வேலைக்கா படிக்கிறீங்க இவளவு சுமை சுமக்கிறீன்களே என பை கொளுவிச்செல்லும் பிள்ளையை பார்த்து விவேக் கேட்ப்பார். அங்கு மட்டும் தான் பழைய விவேக் தெரிந்தார் . 


அனுஷ்கா கவர்ச்சிக்காக வந்தாலும் புப்ளிக்கிலை இருக்கிற வரவேற்ப்பு எப்பா . 

இருந்தாலும் திரைக்கதையால் கட்டிப்போட்ட சிங்கம் . தைரியமாக மாபெரும் வெற்றி என்று சொல்லலாம் . ஹரி , சூர்யா , பிரகாஷ்ராஜ் இன் உழைப்பு தெரிகிறது . ஒரு படத்தை கொண்டு சேர்க்க தாய் உணர்ந்து நடிக்க வேண்டும் என நிரூபித்துள்ளனர். நல்லதொரு கமேர்ஷால் படம் . 

இராவணா

  

  விசில், ஆரவார கூட்டம்  இல்லாத நாளா போய் ராவணா பாக்க வேணும்னு கிழமை நாட்கள்ல போய் பார்ப்போம்  என்று இன்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது .

கதை உலகத்துக்கே தெரிந்த கதை தான் . வெளிநாட்டு கதைகளை சுட்டு சினிமா எடுப்பதை விட எமது வரலாற்று கதையை எடுத்து அதை வெளிநாடுகளுக்கு நவீன முறையில் மாற்றி கொண்டு போய் சேர்த்த மணிக்கு முதல் வாழ்த்துக்கள் .

ஆனா இன்னும் ராமாயண கதை முழுதாக தெரியாத கூட்டம் கூட இருக்குன்னு தியேட்டர் கமெண்ட்ஸ்  சொல்லியது .



அப்படி அப்படியே பாத்திர படைப்புகள் . ராமனாக பிரிதிவ் ராஜ் , சீதையாக ஐஸ்வர்யா ராய் , ராவணன் விக்ரம் ,அனுமான் கார்த்திக் , கும்பகர்ணன் பிரபு , விபீஷணன் - பெயர் தெரியாது,   சூர்ப்பனகை - பிரியாமணி . அதே இயல்புகளுடனும் படைக்கப்பட்டுள்ளது . ஆட்டை குழம்பு வைச்சு சாப்பிட சொல்லு சாபிடுறன், மற்றையது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர் ராவணனுக்கு தவறு என சுட்டிக்காட்டிக்கொண்டு இருப்பார் . அவர் தான் விபீஷணன் .

படத்தின் சிறப்பு  - (இப்பிடி சொன்னாலே  நிச்சயம் மறை கருத்தும்  இருக்கும்) 

மணி கதையை(அதே கதை ) கையாண்ட விதம் மிக அருமை . கதையின் மையக்கருவையும் கோணத்தையும் மாற்றி வரலாற்றையே மாற்றி விட்டது. ராவணன் பற்றி வரலாறு  கூறிய பொய்யை போட்டு உடைத்தது நவீன ராவணன் . எத்தனை குழுக்கள்  கொடி தூக்க போகுதோ ?

ஒளிப்பதிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது  போல என்னையும் கவர்ந்தது . மனோஜ் பரமஹம்ச க்கு பிறகு சந்தோஷ் சிவனை அடையாளம் காட்டியுள்ளது . உயிரே க்கும் அருமையாக பண்ணியிருப்பார் . நீர்வீழ்ச்சி மற்றும் காடுகளில் கமெராவை வைத்த விதம் அருமை .

கள்வரே கள்வரே பாடல்  காட்சி அமைப்பு பாராட்டுக்குரியது . அவ்வளவு அழகு . ஐஸ்வர்யாவும் காட்ச்சியும் .

ராவணனின் பாத்திரத்தை மாற்றி அமைப்பதில் எளிமையான வெற்றியை கண்டிருக்கிறார் . ராமன் மனதில் நிற்க்கவில்லை , ராவணன் தான் வாழ்கிறான் . படத்திலும் வாழ்ந்தான் .

ராவணனை சிவன்  பக்தனாக காட்டிய வரலாறு. ஹரியை ஹீரோவாக காட்டியது . எம்மை இழிவாக காட்டுவதே வேலையாக போய் விட்டது . மணியின்  காவியம் சிந்திக்க வைக்கும் .

படத்தின் எதிர் மறை(மயினஸ் ) 

முக்கியமாக மணியின் பழைய படங்களில் இருந்த சிறப்பு இதில் இல்லை . காரணம் ஒரு வகையில் சுகாசினியின்  எழுத்தாகவும் இருக்கலாம் . மணி  சொல்ல வரும் ,காட்ட நினைக்கும் காட்ச்சிகள் வசனத்தில் பஞ்சத்தை காட்டியது . சில இடங்களை தவிர. சுஜாதாவை நிரப்ப இன்னும் யாரும் வரவில்லையோ ? சுஜாதா மணியின் படங்களின் சிறப்பு எனலாம் .

இந்த கெமிஸ்ட்ரி எனும் விடயம் ஐஸ்வர்யா ராய்க்கும் , விக்கிரமுக்கும் இடையில் இல்லை . சில இடங்களில் பார்வையில் மாத்திரம் தெரிகிறது . ஒரு வேளை சீதையையும் ராவணனையும்  நெருக்கமாக காட்டினால் குழுக்கள் கொடி பிடிக்கும் என்று பயந்திருக்கலாம். ஆனால்  அந்த குறையே இறுதி காட்ச்சியில்  மனதை நிரப்பாத ஒரே காரணம் .

என்னைப்பொருத்த வரை மோசமான எடிட்டிங் ..

காட்டு சிறுக்கி பாடலையும் காணவில்லை . ராவணனோடு டூயட் பாட கூடாது என்றோ ?

வசனங்களில் ஆங்காங்கே சுகாசிநியினியை  அடையாளம் காட்டுகின்றன. விக்ரம் ஐஸ் இடம் கேட்க்கும்  " அவரு எப்பிடி சிவப்பா இருப்பாரோ ? ஆமா சாமின்னா சிவப்பா தானே இருப்பாரு ? " " நாம எல்லாம் அரக்கர்கள் அழுக்கு தீண்டப்படாதவர்கள் " போன்ற வசனங்கள் ஹயிலயிட் . சுஜாதாவின் எழுத்தையும் ஞாபகப்படுத்தியது  . எனக்கு திராவிடர்கள் வரலாற்றில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது மனதில் தோன்றியது .

ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மட்டுமே பாராட்ட கூடியது . கார்த்திக்கும் சிறப்பாக பண்ணியிருப்பார் . ஆனால் விக்ரம் நடிப்பை சில இடங்களை தவிர பெரும்பாலான இடங்களில் காணவில்லை .

மணி மாற்றியமைக்க நினைத்த வரலாறு , படைக்க இருந்த காவியம் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பாலும் , போர்க்கொடிகளாலும் காணாமல் போய் விட்டது . இவை இல்லாமல் சாதாரண தரத்தில் திருப்தியடைய வைத்திருக்கிறது ராவணா .

நல்ல படத்தை  தூக்கி நிறுத்தியது ஒளித்தொகுப்பும் மணியுமே !!

"வரலாற்றை மாற்றி அமைத்த காவியம் " - வாழ்ந்திருக்கிறான் . 


எனது பார்வை பிடித்திருந்தா மறக்காம  ஓட்டையும் karthikeyan

சினிமா திரை

karthikeyan 


இன்றும் ஒரு தகவலுடன் ஆனால் கொஞ்சம் உங்களுக்கு பிடித்த தகவல் தான் .கூடுதலாக சிலர் திரைப்படங்களை தவறாமல் பார்ப்பதுண்டு . ஆனால் ப்ரொஜெக்டர் போன்றன திரைப்படம் ஓடுவதற்கு காரணம் என நாம் நினைப்பதுண்டு .

திரை பார்ப்பதற்கு வெறுமையானதாகவே இருக்கும் . அதனாலோ என்னவோ அதன் சிறப்பு அறிந்திருப்பதில்லை . திரை சிறந்த தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டது  .அதை பற்றி பார்ப்போம் ..

திரைக்குபின்னால் இருந்து பார்க்கும்போது ..



திரைக்கு முன்னால் இருந்து பார்க்கும் போது ...


திரை அதில் பட்டு தெறிக்கும் வெளிச்சத்தை  வைத்து வகைப்படுத்தப்படுகிறது .


Matte white: < 5 % குறைவான ஒளித்தெறிப்பு மிக கடுமையான சாம்பல் நிற படங்கள் , மங்கலான வெளிச்சம் காணப்படும். 


Pearlescent: 15 % ஒளித்தெறிப்பு . கடுமையான  சாம்பல் நிறமும். தெளிவான வெளிச்சமும் காணப்படும் . கூடுதலாக தியேட்டர்களில் பொதுவாக பாவிக்கப்படும் திரை .தெறிப்படையும் வர்ணபூச்சுகள்  பூசப்படும் .


Silver: 30 % ஒளித்தெறிப்பு , நடுத்தரமான சாம்பல் நிற, மிக மிக தெளிவான படம் , கடுமையான நிறங்கள் மங்கலாக தெரியும் .


Glass bead: 40   %  அல்லது அதற்க்கு மேலான ஒளித்தெறிப்பு . சாதுவான சாம்பல் நிற படங்கள் . நல்ல தெளிவான படம் .
இது பல சிறிய மாபிள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டு பார்க்க கண்ணாடி போல பூச்சு மென்மையாக பூசப்படும் . 


வெறுமனே பெரிய படத்தை மாத்திரம் கொண்டு அவை வடிவமைக்கப்படுவதில்லை . அவை ஒலிப்பதையும் சத்தத்தையும் கொண்டும் தீர்மானிக்கப்படுகின்றன . 


சாதாரண  தியேட்டர்களில் இடது பக்கத்தில் தொலைவில் ஒரு ஸ்பீகரும் நடுவில் ஒன்றும் . வலது  பக்கத்தில் தொலைவில் ஒன்றும் இருக்கும் . அவை தான் நாம் உண்மையான சூழலில் இருந்து சத்தத்தை உணருவது போன்ற உணர்வை ஏற்ப்படுத்தும் . அதை தான் DTS சவுண்ட் என்கிறோம் .




மூன்றுவகைகளின் அவற்றின் தெறிப்புக்கு ஏற்ப்ப திரைகளை தெரிவு செய்கின்றனர் .


Flat screen - தட்டையான திரை 






இதில் மேலே படத்தில் உள்ளவாறு நடுப்பகுதியை ஒளி விரைவாக வந்தடைந்துவிடும். கரைப்பகுதிகளுக்கிடையான தூரம் கூடவாக இருக்கும் . அதனால் இதில் கரையில் சற்று பெரிதாக உருவங்கள் தோன்றும் . இதனை நிவர்த்தி செய்யவே வளைந்த திரை வந்தது . 


Horizontal-curve screen - வளைந்த நீளமான திரை 




வளைந்த திரை இரு புறமும் வளைந்திருக்கும் . இதனால் இறுதி முனைகள் முன்னோக்கி வந்திருக்கும் . ஆகையால் ஒரே நேரத்தில் ஒளி திரையில் படும் . 


Torex ஸ்க்ரீன் 


இவை அனைத்தையும் நிவர்த்தி செய்யும் விதமாக உருவாகியதே டோரெக்ஸ் ஸ்க்ரீன் . இது இரு புறமும் மட்டுமல்லாது மேலேயும் கீழேயும் வளைந்திருக்கும் . அதனால் முழு ஒளியும் ஒரே நேரத்தில் திரையில் படும் .