புதன், 6 அக்டோபர், 2010

கிரிவலம் ஒரு பார்வை


 இதற்கு பெயர் போன ஊர் திருவண்ணாமலை. இங்கு ஒவ்வொறு மாதமும் பௌர்ணமி அன்று பல்லாயிடரக்கணக்கான மக்கள் திருஅண்ணாமலையை(18 கிலோ மீட்டர்) சுற்றி வருகிறார்கள்.
இப்படி சுற்றி வரும்போது "சிவ சிவ" என்று சொல்லிகொண்டே சுற்றி வர வேண்டும் என மலை சுற்றும் பாதையில் எழுதி வைத்து இருக்கிறார்கள். "சிவ சிவ" என சொல்லிக்கொண்டே சுற்றினால் புண்ணியம் கிடைக்கும் எனவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையை சுற்றுவதால் மலையில் இருக்கும் மூலிகைச் செடிகளின் தன்மையால் ஒரு வித புத்துணர்ச்சி கிடைப்பதாக சொல்கிறார்கள்.
மாதா மாதம் பௌர்ணமி அன்று திருஅண்ணாமலையை சுற்றும் முறை கடந்த பத்து பதினைந்து வருடங்களாகத்தான் கடைபிடிக்கப்பட்டு வருவதாக மலை சுற்றும் பாதையில் உள்ள ஒரு வயதானவர் சொன்னார். அவரை பார்ப்பதற்கு சித்தர் போன்று நீண்ட முடிகளுடன் காவி வேட்டி, ருத்ராட்சை சகிதம் காட்சி தருகிறார். ஆனால் அவர் உண்மையிலேயே முனிவரா என தெரியவில்லை. இதற்கு முன் தீபம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே சுற்றி வருவார்களாம்.
பௌர்ணமி அன்று மட்டும் இல்லாமல் சிலர்அமாவாசை அன்றும் சுற்றி வருகிறார்கள். இப்படி சுற்றுவது வெகு சிலரே. மேலும் அமாவாசை அன்று திருஅண்ணாமலையை எதிர்மறையாக சுற்றி வரும்போது திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்த முனிவர்களீன் ஆவி தெரியும் என்றும், ஆனால் அந்த ஆவியை பார்க்க நம் மனம் திடகாத்திரமாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது வெறும் செவி வழி செய்தியாகவே இருக்கிறது. இன்று வரை யாரும் இதைநிரூபிக்கவில்லை.
எப்போதாவது ஒரு சிலர் மலையில் அதுவும் பகலில் கருப்பாக நீண்ட முடியுடன் ஒரு உருவம் ஆகாயத்துக்கு பறந்து சென்றதாகக் கூறுவர்.
பௌர்ணமி,அமாவாசை தினங்கள் மட்டும் இன்றீ சாதாரண நாட்களீலும் சிலர் சுற்றீ வருவார்கள்.திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு சென்றால் நாம் இதை நேராக பார்க்கலாம். இதில்லாமல் சில வெளிநாட்டு பக்தர்களும், சில உள்ளூர் வாசிகளும் தினமும் மலையை சுற்றி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து வந்து பல வருடங்களாக இங்கு தங்கி உள்ள வெளி நாட்டினர் சிலர் தினமும் மலையை சுற்றி கிரிவலம் வரும் போது கிரிவலப் பாதையில் இருக்கும் குப்பைகளை அப்புறப் படுத்துகிறார்கள். இவர்களுக்கு இருக்கும் அக்கறை கூட கிரிவல பாதையில் வீடு கட்டித் தங்கி உள்ள உள்ளூர் வாசிகளுக்கு இல்லாமல் போனது வெட்கப்படவேண்டிய விசயம்.
கார்த்திகை மாதத்தில்தான் கிரிவலம் வெகு சிறப்பாக இருக்கும். அன்று ஒரு நாள் மட்டுமே லட்சக்கணக்கானோர் கிரிவலம் வருவார்கள். அடிமுடி காணாத அண்ணாமலையில் அன்று சாலையின் தார் தெரியாத அளவுக்கு மக்கள் கூட்டம் இருக்கும்.
தீபத் திரு நாளான அன்று மலையின் உட்சியில் தீபம் ஏற்றப்படும். இந்த சமயத்தில் மலையைச் சுற்றி வர உடம்பில் புது தெம்பு வேண்டும். கிரிவலப் பாதையில் மொத்தம் 8 லிங்கங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொறு ராசிக்கு உகந்தவை. 8 லிங்கங்களும் அவற்றின் ராசிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திரலிங்கம் -         ரிஷபம்,துலாம்
அக்னிலிங்கம்  -         சிம்மம்
எமலிங்கம்         -         விருச்சிகம்
நிருதிலிங்கம்  -         மேஷம்
வருணலிங்கம் -         மகரம்,கும்பம்
வாயுலிங்கம்   -         கடகம்
குபேரலிங்கம்  -             தனுசு, மீனம்
ஈசான்யலிங்கம்     -         மிதுனம், கன்னி
12 ராசிக்காரர்களும் அவர்களுக்கு உகந்த லிங்கங்களை காலால் நடந்து சென்று தரிசிக்கும் போது சகல நன்மைகலும் கிடைக்கும். இதுவும் அங்கு பல இடங்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் கிரிவலத்தின் ஆரம்ப நிலையில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை மிகவும் மோசமாகி உள்ளது. இது மலை சுற்றும் பக்தர்களுக்கு மிகவும் இடைஞ்சலைத் தருகிறது. மேலும் கிரிவலப் பாதையின் முதல் 4 கிலோ மீட்டரும், கடைசி 2 கிலோமீட்டரும் நகரத்தில் வருகிறது. இதனால் கிரிவல்ம் செல்பவர்கள் வாகன நெரிசல்களால் அவதிப்பட நேரிடுகிறது.
கிரிவலப் பாதை முழுவதும் ஏராளமானோர் அன்னதானம் உள்ளிட்ட பல தானங்களை வழங்குகிறார்கள். பெரும்பாலும் இவை நேர்த்திக் கடனாக செய்யப்படுகிறது. ஒரு சிலரே இதை சேவையாக கருதி ஒவ்வொறு மாதமும் தவராமல் செய்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க சிலரை பரிதாபமும், பலரை முகம் சுளிக்கவும் செய்யும் விஷயம், இங்கு கிரிவலப் பாதை முழுவதும் நிறைந்து காணப்படும் பிட்சைக்காரர்கள். சிலர் காவி வேட்டி சகிதம் காணப்படிகிறார்கள். இந்த பிட்சைகாரர்களுக்கு பணம் ஏதாவது குடுத்தால் நாம் தப்பித்தோம், இல்லை எனில் அவர்கள் நம்மை புற முதுகில் திட்டுவார்கள். இதை சர்வசாதரணமாக கிரிவலப் பாதையில் காணலாம்.
கிரிவலத்தின் போது ஒவ்வொறு கிலோ மீட்டர் முடிவிலும் கடந்து வந்த தூரம், இனி செல்ல வேண்டிய தூரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொறு லிங்கம் இருக்கும் இடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் காலில் செருப்பு அணிந்து கொண்டும், கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலும் மலையைச் சுற்றி வருகிறார்கள். வழி நெடுகிலும் ஏராளமாக சிமெண்டால் ஆன இருக்கைகள் பக்தர்கள் உட்காருவதற்கு போடப்பட்டுள்ளது.
அதேபோல குடிநீருக்கு தண்ணீர் குழாய்களும், இரவிலும் கிரிவலம் வருவதால் மின்சார விளக்குகளும் வழி நெடுகிலிம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சில தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வராமலும், குழாய் உடைந்தும் காணப்படுகிறது.
வெறுங்காலால் கால்கடுக்க நடந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபாதையில் ' டைல்ஸ்' பதித்துள்ளனர். பெரும்பாலும் நடைபாதைகளை தற்காலிக கடைகாரர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் பக்தர்கள் நடைபாதையை உபயோகிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.
கிரிவலப் பாதையில் 8 லிங்கங்களைத் தவிர்த்து, ஏராளமான தனியார் கோவில்கள் உள்ளன. மேலும் பல கோவில்கள் இப்போது கட்டப்பட்டு வருகின்றது. பெரும்பாலும் இவை பணத்துக்காக தான் கட்டப்படிகின்றன. இதை நீங்கள் கிரிவலம் வரும்போது நேரிடையாக தெரிந்து கொள்ளலாம்.
கிரிவலப் பாதையில் இருக்கும் குபேரலிங்கம் கோவிலில் திருப்பதியில் உள்ளது போன்று காசு எறிகிறார்கள். காரணம் தெரியவில்லை. தெரிந்துகொள்ளவும் விருப்பம் இல்லை.
இதை தாண்டியதும் வருவது "இடுக்கு பிள்ளையார் கோவில்". எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு இங்கு உண்டு. ஆம் இங்கு பெயர் தான் இடுக்கு பிள்ளையார், ஆனால் இடுக்கு மட்டுமே உண்டு, பிள்ளையார் இல்லை.
இது ஒரு சிறிய கோவில். இந்த கோவிலுக்குச் செல்ல ஒரே ஒரு சிறிய வழி. மிகவும் குறுகலாக இருக்கும். இந்த வழியில் இரண்டு பாதங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். இந்த கோவிலுக்கு பின் புறமாக சென்று ஒருக்களித்த படி, திக்கித் திமிறி, உடலை லாவகமாக அசைத்து கொஞ்சம் கொஞ்சமாக, எதிரில் இருக்கும் நந்தியை பார்த்தபடி வெளியே வரவேண்டும். இது மிகவும் இக்கட்டாக இருப்பதால், இதில் எல்லோராலும் ஈசியாக வர முடியாது. ஆனாலும் எல்லோராலும் உள்ளே புகுந்து வெளியே வரமுடியும் என்பது இதன் சிறப்பு.
உடல் பருமன் கொண்டவர்கள் கொஞ்சம் கஷ்டப்படவேண்டி இருக்கும். இப்படி கஷ்டப்பட்டு இடுக்கு பிள்ளையார் கோவில் உள்ளே புகுந்து வெளியே வரும்போது, 10 கிலோ மீட்டர் நடந்து வந்ததால் ஏற்பட்ட அலுப்பு, கால் வலி, உடல் வலி எல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்ச்சி நம்  உடம்புக்கு கிடைக்கும்.
இது சத்தியமான உண்மை. நானும் இதை உணர்ந்து இருக்கிரேன். இடுக்கு பிள்ளையாரை தரிசித்தவர்கள் ஈசான்ய லிங்கத்தை தரிசித்த பின்பும் எந்த சோர்வும் இல்லாமல் பெரியக் கோவிலுக்குச் செல்ல முடியும். ஆனால் இடுக்கு பிள்ளையார் கோயிலில் உள்ளே நுழைந்து வராமல், ஈசான்ய லிங்கத்தை தரிசித்து விட்டு அல்லது தரிசிக்காமல் ஈசான்ய லிங்கத்தை தாண்டி நடந்து செல்லும் போது கடுமையான உடல் வலி ஏர்படுகிறது. இதை நான் பல முறை அனுபவித்து இருக்கிரேன்.
இதற்கு காரணமாக ஈசான்யலிங்கம் சுடுகாட்டில் அமைந்து இருப்பதை கூருகின்றனர். ஆனாலும் இதற்கு சரியான காரணத்தை இது வரை யாராலும் கூர முடியவில்லை. இப்படி எண்ணற்ற அதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த கிரிவலப் பாதையை நீங்களும் வலம் வந்து உங்களுடைய அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஓம் நம சிவாய

எழுத்து-
எண்ணம்-
உருவாக்கம்-
---கார்த்திகேயன்.

எந்திரன் ர‌ஜினியின் மாஸை மட்டும் தவிர்த்தால் - வெறும் ஆட்டுக்கல்.

ரசிகர்களாலும், மீடியாக்களாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்திரன். ர‌ஜினி, ஷங்கர், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் போன்ற பிரமாண்ட பெயர்களால் எந்திரன் மீதான எதிர்பார்ப்பு வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததை சாதாரண ரசிகர்களும் அறிவர். என்டிடிவி உள்ளிட்ட ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் எந்திரனை மகத்தான திரைப்படம் என்று வர்ணித்து வரும் நிலையில் இப்படத்தை விமர்சனம் செய்வதென்பது சவாலான விஷயமாகும்.

WD
முதலில் எந்திரன் கதையை பார்ப்போம். வசீகரன் என்ற விஞ்ஞானி பத்து வருடங்கள் உழைத்து மனிதன் போலவே இருக்கும் ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். இந்த ரோபோவை ஒத்துக்கொள்ள மறுக்கிறார் வசீகரனுக்கு குருவாக இருக்கும் நபர். தனது சிஷ்யன் தன்னால் முடியாததை சாதித்துவிட்டான் என்ற கோபமே இதற்கு முக்கிய காரணம். இரண்டாவது இந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் என்னவென்று தெ‌ரியாது. சொன்னதை செய்யும். மனித உணர்வுகள் இதற்கு பொருட்டல்ல. 

இந்த ஒரு பலவீனத்தை வைத்து வசீகரனின் மகத்தான கண்டுபிடிப்பை நிராக‌ரிக்கிறார் குரு. இதனால் தனது கண்டுபிடிப்பான மனித ரோபோவை இந்திய ராணுவத்தில் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், உயி‌ரிழப்பை குறைக்க வேண்டும் என்ற வசீகரனின் கனவு நிராக‌ரிக்கப்படுகிறது.

இதனால் தன்னால் கண்டுபிடிக்கப்பட்ட எந்திரத்துக்கு மனித உணர்வுகள் கிடைக்கச் செய்கிறார் வசீகரன். மனித உணர்வு கிடைக்கப் பெற்ற எந்திர மனிதன் தன்னை உருவாக்கிய வசீகரனின் காதலியையே காதலிக்கிறது. இதனை விரும்பாத வசீகரன் எந்திரனை கண்டம் துண்டமாக வெட்டி குப்பையில் எறிகிறார். இதனை அறிந்த வசீகரனின் குரு மனித எந்திரனுக்கு உதவி செய்து அவனை மீண்டும் முழுமையான எந்திரனாக்குவதுடன் அவனுக்குள் அழிக்கும் சக்தியையும் புகுத்துகிறார்.

அழிக்கும் சக்தி பெற்ற எந்திரன் வசீகரனின் காதலியை கவர்ந்து செல்ல, வசீகரன் அதன் கொட்டத்தை அடக்கி காதலியை எப்படி மீட்டுக் கொள்கிறார் என்பதே எந்திரன் படத்தின் கதை.

படத்தின் கதையை படிக்கும் போதே எந்திரனை எப்படி உருவாக்கியிருப்பார்கள், அதனை எப்படி தத்ரூபமாக உலவவிட்டிருப்பார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கும். இந்த வேலையை ஹாலிவுட்டின் பிரபல நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு மட்டும் ஏறக்குறைய அறுபது கோடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஹீரோ ர‌ஜினியை தத்ரூபமாக எந்திரனாக காட்டுவது, கிளைமாக்ஸில் எந்திரன் ர‌ஜினி தனது ஒவ்வொரு பார்ட்ஸையும் தனித்தனியாக கழற்றுவது போன்ற காட்சிகளை அச்சு அசலாக காட்டியிருக்கிறார்கள். 

வசீகரன் (ர‌ஜினி) பத்து வருடங்கள் இந்த மனித ரோபோவை உருவாக்க கஷ்டப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு காட்சி எதுவும் வைக்கவில்லை. வசீகரனே இந்த‌் தகவலை சொல்கிறார். பத்து வருஷம் கஷ்டப்பட்டதை காட்ட இயக்குனர் தனது கற்பனையிலிருந்து செலவழித்தது வசீகரனின் ஒட்டுத் தாடியும் நீண்ட தலைமுடியும் மட்டுமே. இந்த பத்து வருட இடைவெளியில் இவர் ஐஸ்வர்யா ராயையும் காதலிக்கிறார். காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட ஒரு காட்சியும் அதனைத் தொடர்ந்து ஒரு டூயட்டும் படத்தில் உள்ளது. ஒட்டுமொத்த படத்தைப் பார்க்கும் போது காதலிக்கு நேரம் செலவழிக்காததை காட்ட அல்ல, டூயட்டுக்காகவே இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
மனித எந்திரன் (இதுவும் ர‌ஜினியே) செய்யும் சாதனைகளும், அசட்டுத்தனங்களும் படத்தின் முன்பகுதியில் பிரதானமாக வருகிறது. டிவியை போடு என்று சொன்னால் டிவியை ஆன் செய்யாமல் கீழே போடுகிறது. தீயில் சிக்கியவர்களை காப்பாற்று என்ற சொன்னால் இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது நிர்வாணமாக காப்பாற்றி எல்லோருக்கும் முன்பாக கொண்டு வந்து நிறுத்துகிறது. எந்திரத்துக்கு மனித உணர்வுகள் இல்லை என்பதை காட்டும் இந்தக் காட்சிகள் படத்தில் அத்தனை உறுத்தாமல் பொருந்திப் போவதை பாராட்டியே ஆக வேண்டும்.

WD
வசீகரன் எந்திரனுக்கு மனித உணர்வுகளை ஒரு கணிதம் போல் எழுதி காண்பிக்கும் காட்சிக்கு இரண்டு முகங்கள் உள்ளது. நகைச்சுவை உணர்வு உள்ளவர் அதனை அந்த கோணத்தில் எடுத்துக் கொள்ளலாம், சீ‌ரியஸான ஒரு மனிதர் அதனை சீ‌ரியஸாக எடுத்துக் கொள்ளலாம். ஆக, இப்போது எந்திரனுக்கு மனித உணர்வுகள் வந்துவிட்டது. அது வசீகரனின் காதலியை காதலிக்க‌் துவங்கிவிட்டது. கல்யாணத்தன்று அது காதலியை கடத்தியும்விட்டது. இனி கிளைமாக்ஸ். 

படத்தின் முக்கால்வாசி பட்ஜெட் இந்த கிளைமாக்ஸுக்கு செலவிடப்பட்டிருக்கும் என்பதை படத்தின் பின்னணி இசையை கேட்கும் ஒரு குருடன்கூட உணர்ந்து கொள்வான். எந்திரனின் கொட்டத்தை அடக்க வசீகரன் பல விஷயங்கள் சொல்கிறார். மியூட் செய்யப்பட்ட இந்தக் காட்சியை பார்க்கும் போது ஒருவர் பெ‌ரிதாக எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் வசீகரன் சிட்டியின் மின்சார சப்ளையை கட் செய்ய‌சொல்வதும், எந்திரனைப் போலவே இருக்கும் நூற்றுக் கணக்கான எந்திரன்கள் கார் பேட்ட‌ரியிலிருந்து ‌‌ரீசார்‌‌் செய்துக் கொள்வதும் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும் சமாச்சாரங்கள். இறுதியில் எந்திரன்கள் பந்தாகவும், பாம்பாகவும், ராட்சஸ மனிதனாகவும் மாறி அட்டகாசம் செய்யும் காட்சிகள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட பல படங்களின் சாயல்.

ர‌ஜினி என்ற மாஸ் பிம்பம் இல்லாமலிருந்தால் எந்திரனை பற்றி நினைப்பதே ஒரு தயா‌ரிப்பாளருக்கு வாழ்நாள் துர்சொப்பனமாக இருந்திருக்கும். இதிலிருந்தே படத்தின் திரைக்கதை தரத்தை ஒருவர் தெ‌ரிந்து கொள்ளலாம். ரஹ்மானின் இசையும், பின்னணி இசையும் பாஸ் மார்க்கை‌் தாண்டவில்லை. இதனை பு‌ரிந்து கொள்ள முடியாதவர்களும், பு‌ரிந்து கொள்ள மறுப்பவர்களும் அவ‌ரின் ஸ்லம்டாக் மில்லியன‌ரின் பின்னணி இசையை மீண்டும் ஒருமுறை கேட்கவும் (கவனிக்க, பாடல்களை அல்ல, பின்னணி இசையை). 

மிகப் பெ‌ரிய சாதனை செய்யும் விஞ்ஞானியின் இரு அசட்டு அசிஸ்டெண்டுகள் (சந்தானம், கருணாஸ்), நம்ம கூட்டத்துல ஒரு கறுப்பு ஆடு என்று எந்திரன் கர்‌ஜிப்பது (அப்படியே அசோகன் பட எஃபெக்ட்), வசீகரனின் குருவுக்கு சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு.... திரைக்கதையின் அத்தனை நூலிழையும் நொந்து நூலானவை. 

ர‌ஜினியின் மாஸை மட்டும் தவிர்த்தால் எந்திரன் - வெறும் ஆட்டுக்கல்.


நன்றி : ஒரு தமிழ் இணைய தளம் 

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

'காவல் காதல்' இப்போ 'காவலன்'!

karthikeyan
விஜய் - அசின் நடிக்கும் காவல் காதல் படத்தின் பெயர் 3 வது முறையாக மாறியுள்ளது. இப்போது காவலன் என்று மாற்றப்பட்டுள்ளது.

சித்திக் மலையாளத்தில் இயக்கி மாபெரும்   வெற்றி கண்ட பாடிகார்டு படத்தை, விஜய்க்கேற்ற வகையில் மாறுதல் செய்து தமிழில் எடுத்து வருகிறார்கள். மலையாளப் படத்தை இயக்கிய அதே சித்திக்தான் தமிழ்ப் படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு முதலில் காவல்காரன் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு [^] தெரிவித்ததால், பெயரில்லாமலேயே எடுத்து வந்தார்கள். பின்னர் காவல் காதல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பெயரில் ஹீரோ விஜய்க்கு கொஞ்சமும் திருப்தியில்லையாம். இதைத் தொடர்ந்து இப்போது படத்துக்கு காவலன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குநர் [^] சித்திக்.

இதற்கிடையே, இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் சக்தி சிதம்பரம் [^] வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஏ எம் ரத்னத்துக்கு உதவும் விஜய்!

karthikeyan 
விஜய்யை வைத்து கில்லி, சிவகாசி என வெற்றிப் படங்களைத் தந்தவர் ஏ எம் ரத்னம். ஒரே நேரத்தில் 6 மெகா பட்ஜெட் [^] படங்களைத் தயாரித்தவர்.

ஆனால்.... அவருக்கும் அடி சறுக்கியது. தொடர் தோல்விகளால் பெரும் நஷ்டம் ஏற்பட, வட்டியாக மட்டுமே மாதம் ரூ 10 கோடி வரை அவர் கட்டுவதாக சமீபத்தில் ஒரு பட விழாவில் அன்பாலயா பிரபாகரன் [^] தெரிவித்தார்.

இப்போது அந்தக் கஷ்டத்திலிருந்து சற்றே மீள அவருக்கு ஒரு வழி பிறந்திருக்கிறது.

ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடிகர் [^] விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தப் படத்தை இயக்கவிருப்பவர் விக்ரம் குமார். யாவரும் நலம் படத்தை இயக்கியவர்.

சில தினங்களுக்கு முன் விஜய்யிடம் ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா கதையைச் சொன்னாராம். கில்லி மாதிரி விறுவிறுவென திரைக்கதை இருக்க வேண்டும் என விஜய் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க, அப்படியே ஆகட்டும் என்று சொன்ன விக்ரம், சாலிகிராமத்தில் உள்ள ரத்னம் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக ஸ்க்ரிட்டை பக்காவாக உருவாக்கி வருகிறாராம்.

த்ரீ இடியட்ஸ் ரீமேக் பற்றி தெளிவான ஒரு அறிவிப்பு வந்ததும், இந்தப் படத்தை அறிவித்துவிடலாம் என்று ரத்னத்துக்கு வாக்களித்துள்ளாராம் விஜய்!
thanks to: thats tamil

'3 இடியட்ஸ்'-சிம்பு மறுப்பு?

karthikeyan
 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் நடிக்க சிம்பு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்தியில் மெகா ஹிட் ஆன படம் 3 இடியட்ஸ். இப்படம் இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த தமிழ்- தெலுங்கு ரீமேக் படங்களில் ஹீரோக்களாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

விஜய் நடிக்கிறார், சிம்பு நடிக்கிறார், மாதவன் நடிக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் மாதவன் நடிக்கும் ஐடியாவில் இல்லை என்று கூறி விட்டார். மன்மதன் அம்பு படத்தில் தற்போது அவர் பிசியாக உள்ளார். தமிழ் ரீமேக்கில் நடிக்கும் எண்ணமே இல்லை என்று அவர் தனது ட்விட்டர் தகவலில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிம்புவும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் இணைந்து நடிக்க சிம்புவுக்கு விருப்பம் இல்லையாம்.

விஜய்யாவது இதில் நடிப்பது உறுதியா என்றால் அதுவும் தெரியவில்லை.

படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பது மட்டுமே இப்போதைக்கு உறுதியான ஒன்றாக தெரிகிறது. அதேபோல படத்தை ஷங்கர் இயக்குவார் எனவும் கூறப்படுகிறது. அதுவும் கூட இதுவரை உறுதியாகத் தெரியவில்லை
thanks to: thats tamil

3 இடியட்ஸ் ரீமேக்.. விஜய் ஜோடி தமன்னா?

karthikeyan
3 இடியட்ஸ் ரீமேக்கை ஷங்கர் இயக்குவதாகவும் அதில் விஜய், ஆர்யா, ஜீவா மூவரும் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆனால் சம்பந்தப்பட ஷங்கரோ, தயாரிப்பு நிறுவனமான ஜெமினியோ அல்லது நடிகர்களோ இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இன்னுமொரு செய்தி ... சுறா படத்துக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடி கட்டுகிறாராம் தமன்னா.

இந்த வாய்ப்புக்காக அவர் இயக்குநர் ஷங்கரை ரொம்பவே படுத்தி எடுத்துவிட்டாராம். சம்பளக் குறைப்பு, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் என வெகு தாராளத்தையும் ஷங்கரிடம் முன் வைக்க, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

தமன்னாவுடன் ஜோடி சேர்வதில் விஜய்க்கும் ஏக குஷியாம். பாத்ரூம் போகக் கூட செண்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகில், தமன்னாவுடன் ஜோடி சேர்ந்த முதல் படமான சுறாவுக்கு நேர்ந்த கதி பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லையாம்!
:thanks to thats tamil

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பிரபாகரனையும், குடும்பத்தையும் காக்க கடுமையாக முயற்சித்தோம்-கேபி

கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] [^] இயக்கத் தலைவர் பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் காக்க கடுமையாக முயற்சித்தும் அது பலன் தரவில்லை என்று கேபி கூறியுள்ளார்.

கேபி கொடுத்த பேட்டி என்று கூறி படிப்படியாக வெளியாகி வருகின்றன இலங்கை இதழ்களில். அந்த வகையில், டெய்லி மிரர் இதழுக்கு கேபி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

போர் பகுதியிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவுகளை பிரபாகரன் [^] ஏற்கவில்லை. அவ்வாறு செய்தால் புலிகள் எளிதில் தோற்கடிக்கப்படுவார்கள் என்பதால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, பிரபாகரனின் மகன் சார்லஸ் ஆண்டனி என்னுடன் தொடர்பில் இருந்தார்.

மார்ச் 2009ல், போர்நிறுத்தம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டேன். புலிகள் வசமிருந்த பொன்னேரின், பரந்தன், யானைஇறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை இழந்ததும் பிரபாகரன் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், இது காலம் கடந்த முடிவாக இருந்தது.

பிரபாகரனை ஒரு கப்பலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரது இந்த முடிவுக்கு காரணம் நார்வேயில் செயல்படும் புலிகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான நெடியவன் தான்.

இந்நிலையில், பிரபாகரன் மற்றும் குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறொரு பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு அவரது மகன் சார்லஸ் ஆண்டனி கேட்டுக்கொண்டார். தான் போர்க்களத்தில் இருந்து தொடர்ந்து போரிடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்த முடிவையும் பிரபாகரன் ஏற்கவில்லை. போர்க்களத்தில் அவரும் தொடர்ந்து இருந்து போரிட விரும்பினார்.

கடைசி முயற்சியாக பிரபாகரனை ஹெலிகாப்டர் மூலம் வன்னி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லவும், அவரது குடும்பத்தினரை சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு அழைத்துச் செல்லவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்த திட்டமும் தோல்வியடைந்தது என்று கூறியுள்ளார் கேபி
நன்றி: தட்ஸ் தமிழ்
தொகுப்பு: .கார்த்திகேயன்
உங்கள் கருத்து என்ன கமெண்ட்ஸ் இல் எழுதுங்க 

முஸ்லீம் ஊழியையிடம் மத விரோதம் காட்டிய டிஸ்னி-அமெரிக்காவில் சர்ச்சை

அனஹீம், கலிபோர்னியா: அமெரிக்கா [^]வின் புகழ் பெற்ற டிஸ்னிலான்ட் பொழுதுபோக்குப் பூங்காவில் பணியாற்றும் முஸ்லீம் பணியாளரை அவர் கட்டியிருந்த தலைக் கவச துணியை (scarf) கழற்றுமாறு நிர்வாகம் கட்டாயப்படுத்திய சம்பவம் [^] சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண்ணின் பெயர் இமேன் போல்தால் (26). இவர் டிஸ்னிலான்ட் உள்ளே இருக்கும் ரெஸ்டாரென்ட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரிடம், இனிமேல் வாடிக்கையாளர்கள் முன்பு தலையை துணியால் மூடியபடி பணியாற்றக் கூடாது என்று கூறிய நிர்வாகம், அத்தோடு நில்லாமல் கட்டாயப்படுத்தி அதை கழற்றவும் செய்துள்ளது.

இதையடுத்து அமெரிக்க சம வேலைவாய்ப்பு கமிஷனில் புகார் [^] கொடுத்துள்ளார் இமேன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் ஸ்கார்ப் கட்டியபடி பணிக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த மேற்பார்வையாளர்கள், அதை கழற்றுமாறு கூறினர். நான் மறுக்கவே, இனிமேல் ஸ்கார்புடன் பணிக்கு வரக் கூடாது. மீறி வருவதாக இருந்தால் வேலை கிடையாது, வீட்டுக்குப் போய் விடலாம் என கூறி விட்டனர்.

தற்போது ரமதான் மாதம் என்பதால் நான் ஸ்கார்ப் கட்டியபடி வேலை செய்து வருகிறேன். அன்று மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு நாட்களும் கூட இதேபோலவே நடந்து கொண்டனர் மேற்பார்வையாளர்கள் என்றார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீனா காஸி கூறுகையில், எந்த வகையிலும் இமேனை வேலையில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இதனால்தான் தொடர்ந்து பிடிவாதமாக இவ்வாறு கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர் என்றார்.

இந்த சர்ச்சை குறித்து டிஸ்னிலேன்ட் செய்தித் தொடர்பாளர் சூஸி பிரவுன் கூறுகையில், டிஸ்னிக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதை நாங்களோ, அல்லது யாருமோ மீறமுடியாது. வாடிக்கையாளர்கள் மத்தியில்தான் தலையில் ஸ்கார்ப் கட்டியபடி வரக் கூடாது என்று இமேனுக்குக் கூறப்பட்டது. வாடிக்கையாளர்கள் இல்லாத பகுதியில் அவர் தலையில் ஸ்கார்புடன் பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.

பணியாளர்களுக்கு என்று உள்ள சீருடையைத் தவிர்த்து வேறு உடை அணிய டிஸ்னியில் அனுமதி இல்லை. அது வினோதமாகவும் இருக்கும் என்பதால்தான் இந்த விதிமுறை.

அவருக்கு வேறு இடத்தில் வேலை தர முயற்சித்தோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. மாறாக வீடு திரும்பி விட்டார் என்றார்.

மொராக்கோவைப் பூர்வீகமாகக் கொண்டவர் இமேன். கடந்த இரண்டரை வருடங்களாக இந்த ரெஸ்டாரென்ட்டில் பணியாற்றி வருகிறார். இதுநாள் வரை அவர் ஸ்கார்ப் கட்டிக் கொள்ளாமலேயே தான் இருந்து வந்தார். ஆனால் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க குடியுரிமை தொடர்பான தேர்வுக்கு தயாரானபோதுதான், தங்களது மத சுதந்திரத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாம், ஸ்கார்ப் அணியலாம் என்ற விதி இருப்பதை அறிந்து இதுகுறித்து டிஸ்னி நிர்வாகத்திடம் கேட்டார்.

அதற்கு அவர்கள் 2 மாதம் வரை சரியாக பதிலளிக்கவில்லை. பின்னர் டிஸ்னியின் உடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துக் கொடுப்பதைப் போன்று ஸ்கார்ப் கட்டலாம் என கூறினர். ஆனால் அது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கேற்ற வகையில் இல்லாததால் அதை அவர் ஏற்கவில்லை. மேலும் தனது விருப்பப்படி அவர் ஸ்கார்ப் கட்டக் கூடாது என்றும் டிஸ்னி கூறியது இப்போது சர்ச்சையில் முடிந்துள்ளது.

ஷேவாக்குக்கு நோ பால்-தானே பொறுப்பேற்பதாக சங்கக்காரா அறிவிப்பு

தம்புல்லா: இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் சதம் அடிக்காமல் தடுக்க இலங்கை [^] அணியின் கேப்டன் [^] சங்கக்காராவும், மூத்த வீரர் திலகரத்னே தில்ஷனும்தான், நோ பால் போடுமாறு பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவை வற்புறுத்தியதாக செய்திகள் [^] வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு தானே பொறுப்பேற்பதாக சங்கக்காரா கூறியுள்ளார்.

ஒரு வீரரின் சதத்தைத் தடுக்க இவ்வளவு கேவலமாக நடந்து கொண்ட செயல் இதுவரை கிரிக்கெட் [^] உலகம் அறியாததாக கருதப்படுகிறது.

தம்புல்லாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் ஷேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரந்தீவ் வீசிய பந்தை அடித்தார். அது சிக்சருக்குப் போனது. ஆனால் அந்தப் பந்து நோ பால் என நடுவர் அறிவித்தார். வீடியோ கிளிப்பிங்குளைப் பார்த்தபோது வேண்டும் என்றே வெளியில் வந்து பந்தை வீசியிருந்தார் ரந்தீவ் என்பது தெரிய வந்தது.

ரந்தீவின் இந்த செயலை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் பல முன்னணி முன்னாள் வீரர்களும், ரந்தீவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதையடுத்து ரந்தீவ் ஷேவாக்கை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டது. தற்போது ரந்தீவ் விவகாரம் தொடர்பான விசாரணையில் இலங்கை நிர்வாகம் இறங்கியுள்ளது.

சங்கக்காரா-தில்ஷன்:

இதற்கிடையே, கேப்டன் சங்கக்காராவும், தில்ஷனும்தான் ரந்தீவை நோ பால் போடுமாறு கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து ஸ்டம்ப் மைக்ரோபோன் பதிவை ஆராய இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து, அதை போட்டியை ஒளிபரப்பு செய்த டிவி நிறுவனத்திடம் கோரியுள்ளது.

தனது பெயர் அடிபடுவது குறித்து சங்கக்காரா விளக்குகளையி்ல் பந்தை லூசாக போடாமல் இறுக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறும், ஷேவாக் ரன் எடுக்க அனுமதிக்காத வகையில் பந்து வீச்சை இறுக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு மட்டும்தான் கூறினேன். மற்றபடி நோ பால் போடுமாறு நான் சொல்லவில்லை என்று கூறினார்.

இருப்பினும் ரந்தீவ் நோ பால் வீசியது வேண்டும் என்றேதான் என்பது உறுதியாகியுள்ளது. அதை அவராக செய்தாரா அல்லது சங்கக்காரா கூறி செய்தாரா என்பதுதான் இப்போது அறியப்பட வேண்டியதாகும்.

இதற்கிடையே திலகரத்னே தில்ஷன்தான் வேண்டும் என்றே நோ பால் வீசுமாறு ரந்தீவுக்கு யோசனை தெரிவித்ததாக ஒருதகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இலங்கையின் தி ஐலன்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், ரந்தீவிடம் நோ பால் போடுமாறு தில்ஷன்தான் யோசனை தெரிவித்துள்ளார்.

அப்போது கவர் பாயின்ட்டில் அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், சூரஜ் ரந்தீவை பார்த்து சிங்களத்தில் சத்தமாக ஓனே நாம், நோ பால் ஏகாக் தன்னா புல்வான் (நீ விரும்பினால், பேசாமல் நோ பால் போட்டு விடு) என்று கூறினார் தில்ஷன். அவர் அப்படிக் கூறியபோது அருகில் இருந்த எந்த வீரரும் அதைத் தடுக்க முன்வரவில்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஐபிஎல் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் தில்ஷன். இந்த அணியில் ஷேவாக்கும் முக்கிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீரர் போடவிருந்த சதத்தைத் தடுக்க இவ்வளவு மலிவான முறையில் ஒரு அணி சதி செய்தது உலகிலேயே இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பொறுப்பேற்கிறேன்-சங்கக்காரா:

இதற்கிடையே, இந்த அசிங்கமான நிகழ்வுக்கு தானே பொறுப்பேற்பதாக சங்கக்காரா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிரிக்கெட்டில் சில விஷயங்களை அதிரடியாக செய்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது வழக்கமானது தான் அது போட்டியில் ஒரு அங்கமாக இருக்கும்.

ஆனால் இப்போது எழுந்துள்ள நோ பால் விவகாரம் வேறு மாதிரியானது. இது தவறானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் அணியின் கேப்டன் என்ற முறையில் நடந்த தவறுக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தை இப்போது இலங்கை கிரிக்கெட் சங்கம் கையில் எடுத்துள்ளது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

பிஷன் சிங் பேடி பாய்ச்சல்:

ரந்தீவின் செயல் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,

ரன்தீவ் நடந்து கொண்ட விதம் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது விளையாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிறந்த வீரர் இப்படி நடந்து கொள்ள மாட்டார். அவர் மோசமாக நடந்து தன்னை தரம் தாழ்த்தி கொண்டார். இதில் சதி நடந்து உள்ளது.

இதற்கு அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவரை 5 போட்டிகளில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றார் காட்டமாக.

கிரிக்கெட் பிரியரான சசிதரூரும் கூட இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது. ட்விட்டர் மூலம் அவர் விடுத்துள்ள செய்தியில், நோ பால் ரன்னை வீரரின் ரன்னோடு சேர்க்காதது முட்டாள்தனமான விதி. இதனால்தான் ஷேவாக் 100 ரன் எடுக்கா மல் போய்விட்டது. ரந்தீவ் மோசமாக செயல்படுவதற்கும் இந்த விதிதான் காரணம் என்று கூறியுள்ளார்.
karthikeyan

பத்தில் நான்கு இடம் எந்திரன் பாடல்களுக்கே!

தமிழ், தெலுங்கு [^], இந்தி [^] என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன சூப்பர் ஸ்டார் ரஜினி [^], நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள எந்திரன் படத்தின் பாடல்கள்.

தமிழில் டாப் 10 பாடல்களில் முதல் நான்கு இடங்களை எந்திரன் பாடல்களே பிடித்துள்ளன.

மியூசிக்வேர்ல்டு டாப் 10-ல் கிளிமாஞ்சாரே... பாடல் தொடர்ந்து இரு வாரங்களாக முதல் இடத்தில் உள்ளது. அரிமா அரிமா பாடல் இரண்டாவது இடத்திலும், காதல் அணுக்கள் மூன்றாம் இடத்திலும், இரும்பிலே ஒரு இதயம்... பாடல் நான்காம் இடத்திலும் உள்ளன.

மிர்ச்சி டாப் 10-ல் கிளிமாஞ்சாரோ முதல் இடத்திலும், மற்ற மூன்று பாடல்கள் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களிலும் உள்ளன.

இந்தியிலும் எந்திரன் பாடல்கள் புதிய சாதனைப் படைத்துள்ளன. வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியில் அரிமா அரிமா மற்றும் ரஹ்மான் பாடியுள்ள பாடல் பெரும் வெற்றியடைந்துள்ளன. ரஜினி நடித்த படம் ஒன்றின் பாடல்கள் இந்த அளவு இந்தியில் பேசப்படுவது இதுவே முதல்முறை. தெலுங்கில் ஏற்கெனவே பரபரப்பான விற்பனையில் உள்ளன எந்திரன் ஆடியோ சிடிக்கள்.

எந்திரனுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் தமிழில் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தமாகவில்லை. அவர் கைவசம் உள்ள இன்னொரு தமிழ்ப் படம் ரஜினியின் சுல்தான் தி வாரியர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கூட இந்த முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்
தொகுப்பு கார்த்திகேயன். 

எந்திரன் சென்னை உரிமை... முட்டி மோதும் விநியோகஸ்தர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் [^] இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் நடித்தாலும், அவர் படம் வெளியாகும் தினமே திரையுலகின் திருவிழா என்பார்கள் கோடம்பாக்கத்தில். ஒவ்வொரு படம் ரிலீசாகும்போதும் அதை நிரூபித்து வருகிறார் ரஜினி. இதே இப்போது எந்திரன் முறை!

தமிழ் திரையுலகின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துக் கொண்டிருக்கிறது எந்திரன்.

ஆடியோ விற்பனையில் இனி வேறு எந்தப் படமாவது இந்த சாதனையில் பாதியையாவது நெருங்குமா என்று கேட்கும் அளவுக்கு மிரள வைத்திருக்கிறது எந்திரன். இதுவரை நான்கு முறை மறுபதிப்பை வெளியிட்டுள்ளது திங்க் மியூசிக் நிறுவனம். எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையமைத்திருந்தாலும் சில ஆயிரம் சிடிக்கள் விற்றாலே பெரிய விஷயம் என்ற நிலைதான் இன்று ஆடியோ மார்க்கெட்டில் நிலவுகிறது.

ஆனால் ரஜினியின் எந்திரன் சிடிக்களோ வெளியான சில தினங்களில் 7 லட்சத்துக்கும் அதிகமாக விற்றுத் தீர்ந்திருப்பதாக ரேடியோ மார்க்கெட் விற்பனையாளர்கள் வியக்கிறார்கள்.

எந்திரனின் தெலுங்கு [^] மற்றும் இந்திப் பதிப்பான ரோபோவின் இசை விற்பனையும் அமோகமாக உள்ளது.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை பக்கத்து மாநிலங்களில் பெரும் விலைக்கு விற்றுள்ளது சன் பிக்சர்ஸ். தெலுங்கில் ரூ 33 கோடி, கர்நாடகத்தில் ரூ 9.5 கோடி, கேரளாவில் ரூ 6 கோடி (விநியோகஸ்தர் விஜயகுமார்) என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தை கதிகலங்கடிக்கும் விலைக்கு விற்பனையாகியுள்ளது எந்திரன். இந்திய சினிமா சரித்திரத்தில், மாநில மொழிப் படம் ஒன்று பிற மாநிலங்களில் இந்த விலைக்குப் போயிருப்பது இதுவே முதல்முறை. குறிப்பாக கேரளாவில், மம்முட்டி, மோகன்லால் படங்களின் விநியோக உரிமை இதில் பாதி கூட கிடையாது!

இந்திப் பதிப்பை வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. ஆனால் கைமாறிய தொகை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இதுவரை தமிழகம் மற்றும் உலக உரிமை விற்பனை விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

தமிழக விநியோக உரிமையைப் பெறுவதில் பெரும் போட்டியே நிலவுகிறது. ஆனால் எந்தப் பகுதியும் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.

குறிப்பாக சென்னை நகர உரிமையைப் பெறுவதில் பெரும் விநியோகஸ்தர்கள் முட்டி மோதுகிறார்கள். ரஜினியின் சிவாஜி பட சென்னை நகர உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கினார். வாங்கிய விலையை விட இருமடங்குக்கும் அதிகமாக வசூல் பார்த்தார். அந்த நப்பாசையில் எந்திரன் உரிமையைப் பெற்றுவிடத் துடிக்கிறாராம். அவரைப் போலவே இன்னும் பலரும் மோதுவதால், சன் தரப்பு அமைதி காக்கிறது.

"ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்... எந்திரன் சென்னை விற்பனை உரிமை என்பது தமிழ் சினிமா [^] கனவிலும் நினைத்திராத பெரும் விலைக்குக் கைமாறவிருக்கிறது. அதே போல, சென்னை நகரில் மட்டும் 30 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகப் போகிறது... இவையெல்லாம் ஒரே ஒரு மனிதருக்காக... அவர் சூப்பர் ஸ்டார் ரஜினி... வேறு யாராலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது" என்கிறார் விநியோகஸ்தர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.
நன்றி: தட்ஸ் தமிழ்
தொகுப்பு: கார்த்திகேயன்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

எந்திரன் பாடல் விமர்சனம்


பொதுவாக நான் “தல” என்று கூப்பிடுவது, ஏ.ஆர் ரகுமானை மட்டும்தான். தமிழனனின் இசையை உலக அளவில் உயர்த்தியவர். இரண்டு கைகளில் ஆஸ்காரை தூக்கியபோது அதன் கனம் தலையில் ஏறாமல் பார்த்தவர். அவருடைய பணிவு இன்னும் வியக்க வைக்கும். ஏதாவது ஒன்று அவருக்கு பிடிக்காமல் போய்விட்டால் அந்த இடத்தை விற்று நகர்ந்துவிடுவாராம். கத்தி பேசுவதோ, சத்தம் போடுவதோ அவருக்கு பிடிக்காத ஒன்று. நாம் குறட்டை விட்டு தூங்கும் இரவுதான் அவருக்கு வேலைநேரம். பலபேரின் ரோல் மாடல். தமிழிசை இளையராஜாவிடம் அடிமைப்பட்டு கிடந்தபோது, என்னாலும் முடியும் என்று ஜெயித்துக் காட்டியவர். அவரிடம் பிடிக்காத ஒன்று, தமிழ் சானல்களில் கூட பிடிவாதமாக ஆங்கிலத்தில் பேசுவது.
ரஜினி படத்திற்கு முதல்முதலாக முத்து படத்தில்தான் ஆரம்பித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக, அவருடைய படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். படையப்பா, பாபா, சிவாஜி என்று அவருடைய படங்களுக்கு தனித்துவம் வாய்ந்த இசை, பாடல்களை பேசவைத்தன. பொதுவாக சங்கர் படங்களில் ஸ்லோ பாடல்களை கேட்பது கடினம். ஒரு மாதிரி துள்ளலோடுதான் இருக்கும். பாடல்கள் காட்சிகளின்போது கூட ரசிகர்களை கட்டிப்போட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.
எந்திரன் பட பாடல்களை கேட்க நேர்ந்தது. ஏ.ஆர் ரகுமான் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார். இனிமேல் போவதற்கு என்ன இருக்கிறது என்றே கேட்க தோன்றியது. அனைத்தும் கலக்கல். வைரமுத்துவின் வைரவரிகளுக்கு வைரமே பரிசளிக்கலாம்,நாம் கோடிஸ்வரானாக ஆன பிறகு… உங்களுக்காக ஒரு விமர்சனம்.
1. அரிமா, அரிமா – ஹரிஹரன், சாதனா சர்கம்
போர் முரசு போல ஆரம்பிக்கும் இந்த பாடல் “இவன் பேரை சொன்னதும்” என்று ஆரம்பிக்கும்போது, காதுகளை தயார் செய்து கொள்கிறோம். மெல்லிய குரலாலே பழக்கப்பட்டுபோன ஹரிஹரன் குரல் சற்று ஓங்கி மயக்க வைக்கிறது. சாதனா சர்கம், தண்ணீருக்கு பதில் தேன் குடிப்பார் போலிருக்கிறது. மயக்க வைக்கிறார்..மூன்று நிமிடம் சொக்கிப்போகிறோம்
2. 2. பூம், பூம் ரோபா டா – யோகி, கிர்த்தி, டான்வி, ஸ்வேதா
யோகி யின் குரலை முதல்முதலாக “எங்கேயும், எப்போதும்” பாடலில் கேட்டபோது, அவர் குரலை ஏ.ஆர் ரகுமானின் இசையில் கேட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன். இதோ எந்திரனில்..சிவாஜியில் வரும் “அதிரடிக்கார மச்சான்” பாட்டின் அடுத்த வெர்சன். ஏர்.ஆர் ரகுமானின் பேவரைட் ஸ்வேதா குரல் சொக்க வைக்கிறது. தாளம்போட வைக்கும் பீட்..கண்டிப்பாக இன்னும் 2 வருடங்களுக்கும் பப்களில் இந்த பாட்டுதான்…
3. சிட்டி டான்ஸ் ஷோகேஸ் – பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி
பூம், பூம் பாடலின் மியூசிக்கல் வெர்சன். டான்ஸ் ஆடுபவர்கள் எல்லாம் ரெடியாகி கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்கு இந்த பாடல்தான். கலக்கல் இசை..
4. இரும்பிலே ஒரு இதயம் – ஏ.ஆர் ரகுமான், க்ரிஸ்ஸி
காந்தக்குரல் ஏ.ஆர் ரகுமான். அவருடைய குரலில் உள்ள அதே காந்தம் இப்போதும் ஈர்க்கிறது. வாய்ஸ்களுக்கிடையே வரும் அந்த பீட் தாளம்போட வைக்கிறது. நடு நடுவே வரும் அந்த ராப் குரல், மற்றும் ஏ.ஆர் ரகுமானின் வாய்ஸ், திரும்பவும் அதிரவைக்கும் இசை, என்று ஒரு ப்யூசனே நடத்தி விடுகிறார்…ம்..என்னத்த சொல்ல..
5. காதல் அணுக்கள் – விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
யாரிந்த விஜய் பிரகாஷ்..காதல் அணுக்கள் என்று ஆரம்பிக்கும்போது நம் உடம்பில் உள்ள அணுக்கள் ஆட ஆரம்பிக்கிறது. நிறைய பேரின் ரிங்க் டோன் ரெடியாகி கொண்டிருக்கிறது. ஓசன்னா பாடல் போல் இந்த பாடல் ஹிட் ஆகும் என்பது சந்தேகம் இல்லை. கொஞ்சம் ஜீன்ஸ் பாடல் மட்டும் அடிக்கடி வருகிறது. ஸ்ரேயா கோஷல் சரியாக பாடவில்லையென்றால் மட்டுமே ஆச்சர்யம். வழக்கம்போல் வழமையான குரலால் அசத்துகிறார்.
6. கிளிமாஞ்சாரோ – ஜாவித் அலி, சின்மயி
என்னடா, இன்னும் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் படத்துக்கு சின்மயி பாடவில்லையே என்று நினைக்கும்போது இந்த பாடல் வந்து விடுகிறது. ஆஹா..ஆஹா..என்று இடையில் கேட்கும் அந்த குரல் அதையே திரும்பவும் சொல்ல வைக்கிறது. ஆனால் மொத்தமாக பார்க்கும்போது இந்த பாடல்தான் படத்தில் சராசரி. என்னை அவ்வளவாக கவரவில்லை என்றே சொல்லுவேன். ஆனால் வரிகளின் பலத்தால் ஹிட் ஆகலாம்
7. புதிய மனிதா – எஸ்.பி.பி, கதிஜா ரகுமான், ரகுமான்
ரஜினியின் ஓபனிங்க் சாங்காக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஓபனிங்க் சாங்கின் அந்த பெப் இல்லாமல் ஆரம்பிக்கிறது..முதலில் ஏ.ஆர் ரகுமான் குரலில் மெதுவாக ஆரம்பிக்கும் சாங்க், எஸ்.பி.பி குரல் ஆரம்பிக்கும்போது பற்றிக் கொள்ளுகிறது. காலை சாப்பாடு சாப்பிடாமல் அப்பன் ஆட்டோ ஓட்டி சம்பாதித்த 500 ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு “தலைவா..தெய்வமே.,” என்று ரசிகர்கள் அடித்தொண்டையில் கத்தும் வாய்ப்பு நிறைய உண்டு. அவரும் ஏ.சி ரூமில் அமர்ந்து கொண்டு..”ம்..நிறைய திங்க் பண்ணனும்..அரசியல்னா சும்மாவா..இந்த படத்தோட 100 டேஸ் பங்க்சனுல நான் முடிவை சொல்றேன்..” என்று ஆரம்பிக்கும்போது “இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்..” என்று பி.எஸ் வீரப்பா குரலில் எனக்கும் கத்த ஆசைதான்..ஆனால் வீட்டில் நிறைய வேலை இருப்பதால் போயி பொழைப்பை பார்க்கணும்..வரட்டா…
karthikeyan

சங்கர் கையாண்டுள்ள Robot எந்த ரகத்தை சார்ந்தவையாக இருக்கும்.



எங்கு பார்த்தாலும் எந்திரன் பற்றிய பரபரப்புத்தான்.பொதுவாகவே சங்கர், ரஐனி, a.r.ரகுமான் என்றாலே எதிர்பார்ப்புகள் அதிகம்.இவர்கள் கூட்டணி அமைத்து விட்டால் சொல்லவா வேண்டும்.இவர்களுடன், அபிசேக்குடன் திருமணம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத அழகான  ஐஸ் Aunty வேற. 

பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக , திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன எந்திரன் படத்தின் திரை விமர்சனம் என்கிற பெயரில் தமக்கு பிடிக்காத கதாநாயகர்களையும்,கதாநாயகிகளையும் போட்டு தாக்கி ;பதிவை வாசிப்பவர்களின் உயிரையும் நான் எடுக்கப் போவதில்லை என்பதை நான் பெருமையுடன் சமர்ப்பிக்கின்றேன்.

எந்திரன் படம் வெளியாவதற்கு இன்னமும் சில நாட்களே இருக்கின்ற வேளையில்  எதிர்காலத்திலே விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படும் Robot கள் மனிதர்களிற்கு ஆப்பு வைக்கப் போகிறதா? அல்லது உதவி செய்ய போகிறதா? சங்கர் உருவாக்கி உள்ள எந்திரன் கூட இந்த இரண்டில் ஒன்றைத்தான் செய்யப் போகிறது. 
 
ஒரு 10 வருடங்கள் கழித்து நடக்க இருப்பதை இன்றே படங்களில் காட்டுவதில் வல்லவரான இவருடைய எந்திரனில்    ரஐனியுடன்  Robot  வருவதாக சொல்கிறார்கள்.

 
சங்கர் கையாண்டுள்ள Robot  எந்த ரகத்தை சார்ந்தவையாக இருக்கும்.

Personal Robot
 
இதை ஆண்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.பின்ன என்னங்க இது ஆண்கள் செய்ய வேண்டிய சமாச்சாரங்களையெல்லாம் சத்தமில்லாமல் செய்து முடிக்கிது.இந்த Robot பெண்களை கட்டியணைத்து உணர்ச்சியின் எல்லைகளை கடக்க செய்ய போகிறது. எதிர்காலத்தில நிச்சயமாக இது ஏடா கூடமாக அமைய போது.இந்த Robot கள் ஆண்களை வேட்டையாட போது

Personal Robot

இவை வேலைத் தளங்களில் மனிதர்களுடன் வேலை செய்ய போகின்றது.Robot களுடன் சேர்ந்து வேலை செய்வது எந்த அளவிற்கு மகிழ்ச்சியை தர போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.ஆனால் வேலையின் தரத்தில் எந்தவித குறைவும் இருக்க போவதில்லை.கதைத்து நேரத்தை வீணடிக்க போவதும் இல்லை.

Youth Robot (Girl)


எல்லா மனிதர்களிடமும் ஒரே ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது.அதுதாங்க இறுதி வரை இளமையுடன் இருக்க கூடாதா?.அதுவும் பெண்களிடத்தில் றொம்பவே அதிகம்.நம்மட எத்தனை Hero கள் "மாமி கல்யாணம் ஆயிட்டா நம்பவே முடியல என ளொள்ளு விடுறாங்க".ஆனால் இந்த Robot கள் இறுதி வரை இளமையோ இளமை. நம்ம  "ஐஸ்" மாதிரி.

Personal Robot

இந்த படத்திலே உள்ளவாறு, யார் இந்த chess போட்டியில் வெல்வார்கள். மனிதனால் உருவாக்கப்பட்ட Robot ஐ மனிதனாலே வெல்ல முடிவதில்லை.ஆனால் இந்த Robot களை எதிர்வு கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும். இவை தங்களுடன்  விளையாடுகின்ற மனிதர்களின் மனநிலைக்கு ஏற்ப விளையாடுகிறது.

Personal Robot

இவை தொழில் நுட்ப வேலைகளில் ஈடுபடாது சற்று வித்தியாசமாகவே வீட்டு வேலைகளிலும் ஈடுபடுகிறது எந்த வித சலிப்பும் இல்லாமல்.மொத்தத்திலே இவை எங்களை சோம்பேறி (Lazy) ஆக்கப் போவதில்லை என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

morning Robot

நான் அதி காலையில் எழுந்தாலும் எமக்கு நித்திரை தூக்கம் கலைவது கிடையாது. நான் எழுந்தவுடன் ஒரு 10 நமிடமாவது ஒற்றை காலில் நின்ற வாறே நித்திரை கொள்வேன் தெரியுமா?.இவற்றிற்கு எல்லாம் இந்த Robot கள் முற்றுப் புள்ளி வைக்க போகிறது.இவை நமக்கு ஊற்றி தரப்போகும் Tea யில் சொர்க்கம் செல்ல போகிறோம்
karthikeyan

செவ்வாய், 27 ஜூலை, 2010

அடி எண்டா இது அடி(அரசியல் வாதிகள் டங்குவார் )

karthikeyan


சில விஷயங்கள் பெரிய மனுஷன் பண்ணுற வேலையா எண்டு கேக்க தோணும். சில அரசியல்வாதிகள் அடி பட்டாலே பெரிய கொண்டாட்டம் . உலக தலைவர்களே அடி பட்டுகொண்டால் . என்ன சின்னப்புள்ளத்தனமா ?



அடி எண்டா இதுகள் அடி...

துருக்கி



மெக்ஸிகோ (பயபுள்ளை மீசை மேல என்ன அவளவு ஆசை )



தென் கொரியா



உக்ரையின்





ரஷ்யா



இலங்கை (என்ன எண்டு பாக்காதீங்க இவைகளும் அரசியல் வாதிகள் தான் )



சீனா



ஜப்பான்


இந்தியா



தாய்வான்



இத்தாலி



இந்த படங்கள் நிறைய யோசிக்க வைக்கும் சிரிப்போட ..

விண்ணை தாண்டி வருவாயா

karthikeyan


  பரீட்சை முடிந்த உடனேயே விண்ணை தாண்டி வருவாய் போறதெண்டு முடிவே பண்ணியாச்சு . நீண்ட கால எதிர்பார்ப்பு வேற , கவுதம் மேனன் படங்கள் என்றாலே வழமையாக உயிர் . எப்பிடியோ முதல் நாள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சிட்டுது. வந்த உடனேயே எழுதும் பதிவு

ஒரு வருட கால எதிர்பார்ப்பு. பூர்த்தி செய்திருக்கிறார் கவுதம் மேனன் . சிறந்த ஒரு ரசனையாளன் படைப்பாளி என தன்னை மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார் . நிறைய காலத்திற்க்கு பின் ஒரு சிறந்த படைப்பு விண்ணை தாண்டி வருவாயா.உண்மையிலேயே விண்ணை தாண்டி விட்டார் கவுதம் மேனன்



முதலில் இருந்தே கவுதம் மேனன் படங்கள் என்றாலே காட்சி அமைப்புகள் தான் நினைவு வரும் . எதிர் பார்ப்பை தாண்டி அருமையாக காட்சி அமைப்பு . முதலிலேயே விண்ணை தாண்டி வருவாயா கண்களுக்கு விருந்து .வழமை போலவே தனது பாணியில் யதார்த்தமான கதைக்கருவை கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடி இருக்கிறார்.


கதை என்று பார்த்தால் யதார்த்தமாக உருவாகும் காதல் .தமிழ் பேச கூடிய மலையாள கிறிஸ்தவ பெண் திரிஷா , சிம்பு இந்து . சிம்புவின் லட்ச்சியமே படம் எடுக்க வேண்டும் என்பது . திரிஷாவோ படமே பார்த்ததில்லை. காதலில் ஜெயிக்க சிம்பு( கார்த்திக் ) செய்யும் வேலைகள் அனைத்தும் ரசிக்கத்தக்கன . பின்னர் திரிஷாவும்( ஜெசி ) காதலில் விழுகிறார் . இதில் என்ன வித்தியாசம் என்றல் ஒரு பெண்ணின் உண்மைக்காதலையும் எடுத்து காட்டியிருப்பது தான். இருவரும் காதலிக்கிறார்கள் . சந்தர்ப்பம் உறவுகள் வழமை போல காதலை பிரிக்கின்றன .



இறுதியில் உண்மைக்காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஜெயித்தார்களா ? யதார்த்தம் ஜெயித்ததா ? என்பதை உண்மையாக மிக மிக வித்தியாசமான பாணி யதார்த்தமான காட்சி ஓட்டங்கள் வைத்து பூர்த்தி செய்திருக்கிறார் .படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் . ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். சினிமா காதலையும் உண்மையான காதலையும் ஒப்பிட்டு அருமையான விளக்கம்.

காதலின் குழப்பம் நிறைவாக காட்டப்பட்டுள்ளது .

காதலர்களுக்கு இடையே காதலில் ஏற்ப்படும் பிரச்சனைகள் , குழப்பங்கள் நம் கண் முன்னே அப்படியே . நான் ஏன் ஜெஸ்ஸி ய லவ் பண்ணேன் தெரியுமா என சிம்பு அடிக்கடி கேட்பது உருக வைக்கிறது .அனைவரும் கூடுதலாக நமக்கிடையே கேட்டுக்கொள்வது தான் . திரிஷா குழம்புவதும் மீண்டும் காதல் ஏற்ப்படுவது யதார்த்தம் .
ஒவ்வொரு காட்ச்சிகளில் முன்னைய காட்ச்சிகளுக்கு விளக்கம் . அவற்றை தொடர்பு படுத்தி கோர்த்து கொடுத்த பாணி அருமை .



ஒளிப்பதிவில் மனோஜ் பின்னி எடுத்திருக்கிறார். கவுதம் மேனன் காட்சிகளில் குறை இல்லை என்பது படத்தை பார்த்தால் விளங்கும் . பாடல்களின் காட்சி அமைப்புகள் சில வெளி வந்தது தான். ஒவ்வொரு காட்ச்சியிலும் கதைக்கு ஏற்ப்ப தேர்ந்து எடுத்த இடங்கள் அனைத்தும் மனதில் . காதல் காட்ச்சிகளுக்கும் நெருக்கமான காட்சிகளுக்கும் நேர்த்தியான ஒளிப்பதிவு. முக்கியமாக கேரளா காட்ச்சிகள் கோவா , அமெரிக்கா காட்ச்சிகள் போன்றவற்றில் பின்னி எடுத்திருக்கிறார். இரவில் சிம்பு மதிலில் ஏறி இருக்கும் போது நிலவுடன் சேர்ந்து எடுத்த காட்ச்சிகளுக்கு சபாஷ் . சில காட்சி அமைப்புகளில் நம்மை எங்கோ கொண்டு சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.

ஒலிப்பதிவு சொல்லவேண்டுமானால் தனியாக ஒரு பதிவே எழுதலாம். ரகுமான் இந்த படத்தில் முழுதாக ஒரு பாகம் . பின்னணி இசை பின்னி பெடல் எடுத்து விட்டார் . கிடார் வயலின் இசைப்பாடல்கள் ஆரோமலே , கண்ணுக்குள் கண்ணை வைத்து ஸ்பெஷல் . அனைத்து பாடல்களுமே சிறப்பு . மற்றைய பாடல்களும் அனைவருக்கும் இனி பிடிக்கலாம். பினனனியில் பியானோ , கிடார் இசைகள் பிளஸ் . ஆரோமலே புதிய இசை அறிமுகம் தரமாக .தாமரையின் வரிகள் பாடல்களுக்கு மேலும் மெருகு

முக்கியமாக கவுதம் படங்களில் கலை வடிவமைப்பாளர்கள் முக்கியமாக பாராட்ட பட வேண்டியவர்கள். ஒவ்வொரு காட்ச்சிகளும் சரி , நாயகன் ,நாயகி உடை வடிவமைப்புகளும் சரி அனைத்துக்கும் ஒரு சபாஷ் . கலை ரஜீவன் . ஆடை வடிவமைப்பு நளினி சிறிராம் . சிறந்த கற்ப்பனை . பொருத்தமான எளிமையான வடிவமைப்பு .



நாயகி திரிஷா(ஜெசி )
இது வரைக்கும் பார்த்திராத திரிஷா . எளிமையான உண்மையான நடிப்புக்கு பாராட்டுக்கள். இவ்வளவு அழகாக யாரும் திரிஷாவை சேலைகளில் காட்டியது கிடையாது .

நாயகன் சிம்பு (கார்த்திக் )
சிம்புவும் இதுவரை யாரும் பார்க்காத சிம்பு தான். கூடுதலானோருக்கு சிம்புவை பிடிக்கலாம். மிகவும் அமைதி ,எளிமை . எளிமையான தோற்றம் . கலக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். உடை வடிவமைப்புகளுக்கு முக்கிய பாராட்டுகள்.

கே எஸ் ரவிக்குமார் , சிம்புவுடன் இருக்கும் இயக்குனர் போன்றோரே வெளியானவர்களில் படத்தில் அடையாளம் காட்ட கூடியவர்கள். வேறு ஒருவரும் மனதில் நிற்க்கவில்லை.

சில வசனங்கள் ஜொலிக்கின்றன . திரிஷா காதலுக்கு சமயம் , மொழி ,அப்பா காரணம் காட்ட கடைசியா உன்னை எனக்கு பிடிக்கணும் என ஒரு காரணத்தையும் திரிஷா சொல்ல. இது காரணம் என்று சொல்லும் இடம் அருமை . தனக்கு திருமணம் நிச்சயித்து இருக்கு என்ன பண்ணட்டும் கார்த்திக் என்று திரிஷா சொல்ல " நீ ஒன்னும் பெர்மிஷன் கேட்டு வரேல்லையே பொய் கல்யாணம் பண்ணிக்க ஜெசி " என்று சொல்லி அனுப்பது மிக அருமை .



கவுதம் மேனனுக்கு எங்கிருந்து தான் இவளவு அருமையான ரசனைகளோ தெரியைல்லை. அவருக்கு அமையும் ஒளிப்பதிவாளர்கள் கலை வடிவமைப்பாளர்களுமோ தெரியவில்லை . ரகுமானின் இசை , ஓளிப்பதிவு, யதார்த்தம் , கவுதமின் அருமையான படைப்பு . இவை அனைத்தும் விண்ணை தாண்டி வருவாயா ஒரு படமல்ல யதார்த்தமான அழகான கண்ணீர் கவிதை என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் .

படத்தை பார்த்தால் கண்ணீரும் புன்னகையும் ஒரு நிறைவும் இருக்கும் .
மற்றைய இயக்குனர்களின் காதல் படங்கள் முழுவதும் பொய் என்றால் கவுதமிடம் யதார்த்தம் இருக்கும் .உண்மையான யதார்த்தமான காதலையும் காதலர்களையும் காட்டிய கவுதமிட்க்கு பாராட்டுக்கள் . சினிமா காதலையும் யதார்த்தத்தையும் சேர்த்த விதம் அருமை .

உண்மையில் விண்ணை தாண்டி வருவாயா தமிழ் சினிமா காதல்களில் மனதில் நிற்க்கும். விண்ணை உண்மையாக தாண்டிய கவுதமிட்க்கும் , ரகுமானுக்கும் வாழ்த்துக்கள் . ஒரு சபாஷுடன்....