வெள்ளி, 12 ஜூன், 2015

பள்ளி மாணவியின் கவிதை-II

காலையில் எழுந்ததும்
ஒரு கப் டீ குடித்தேன்
கன்றின் வயிற்றில் அடித்து
இன்றைய தினத்தின்
முதல் பாவம் ...

        கோ.ப்ரியா

பூவுக்கும் பொட்டுக்கும்
எந்த ஒற்றுமையும் இல்லை
உன் அழகில்
இணையும் வரை
இது அவைகளுக்கு கடவுள்
கொடுத்த வரம் ...


       கா. நந்தினி

கர்ஜிக்கும் கரு மேகங்கள்
உன் உதட்டின்
உயிர் பறிக்கும் வெண்மையில் பட்டு
உருண்டோடி விழுகிறது
மழை துளிகளாய்!!

     கா.நந்தினி

2 கருத்துகள்: