செவ்வாய், 19 மார்ச், 2013

இவர் எனக்கும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டார்...

கடந்த 4 நாட்களாக எனக்கு காலில் சுலுக்கு ஏற்பட்டு நடக்க முடியாமல் எழ முடியாமல் போய்விட்டது..... சனிக்கிழமை மாலை அருகில் இருந்த ஒரு பாட்டியிடம் சென்று காண்பி்த்தேன்.. ஏதோ மூலிகை தழைகளை கொண்டு உருவிவிட்டார்கள்,,,, செம வலி  தாங்க முடியல....


மறு நாள் சரியாகிவிடும் என்று கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள்...

மறுநாள் காலை எழவே முடியல... அப்போது எங்கள் வீட்டிற்கு வந்த ஒரு பாட்டியின் மூலம் ஒரு பெரியவர் அறிமுகமானார்....

அவரிடம் சென்று உறுவி விட்டாள் சரியாகிவிடும்  என்று சொல்லவே 50 மில்லி விளக்கு எண்ணெயுடன் சென்று அவரை பார்த்தேன்.....


சும்மா சொல்லக்கூடாது.. மணுசன் சரியான ஆள்... ஸ்ஸ்ஸப்பா முடியல பெண்டெடுத்தார்.....


இ்ங்கு நான் சொல்லவந்து இந்தக்க தை அல்ல... இந்த மனிதரை பற்றி தான்... நான் தொடர்ச்சியாக 3 நாள் உறுவ சென்றேன்.. ஆனால் கொஞ்சம் கூட சலித்துக்கொள்ளாமல் அவர் எனக்கு அக்கரையுடன் உறுவி விட்டார்...


நேற்று மாலை நான் உறுவ செல்லவில்லை.. ஆனால் அவர் என்னை தேடி என் வீட்டுக்கே வந்துவிட்டார்...

இன்று மாலை 99 சதவிகிதம் சரியாகிவிட்டது..


அவர் நாளை முதல் வழக்கமான பணிகளை செய்ய சொல்லிவி்ட்டார்....

இந்த 4 நாள் வைத்தியத்துக்கு அவர் சல்லி பைசா கூட வாங்கவில்லை.. ஏன் என்று தெரியவில்லை..

அம்மாவிடம் கேட்டதற்கு.. இதை அவர்கள் பெரும் புண்ணியமாக நினைத்து செய்வதால் பணம் வாங்குவதில்லை என்று கூறினார்...

ஆனால் இதற்கு கைமாறாக அவருக்கு நான் தக்க சமயத்தில் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்....


நான் யோசித்து பார்த்தேன்.. இதுவே ஒரு மருத்துவமனைக்கு சென்றிருந்தால் பல சோதனைகள் செய்து பார்த்து கடைசியில் சுலுக்கு பேண்டேஜ் ஒன்றை ஒட்டி விட்டு பணத்தை கறந்துவிடுவார்கள் அந்த படித்த வைத்தியர்கள்...


ஆனால் இவர்கள் தங்கள் முன்னோர் மூலமாகவோ அல்லது அல்லது இவரை போல சமுக மனப்பாண்மை கொண்டவர் மூலமாக கற்றுக்கொண்டிருப்பார்கள்...


இதனை கற்றுக்கொண்டதால் இது வரை எதுவும் சம்பாதிக்கவில்லை... ஆனாலும் யாரேனும் உதவி என வந்தால் முகம் சுழிக்காமல் உதவுகிறார்கள்...


இவர் எனக்கும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக