சுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம்
நாயகன் ச சிகுமார், நண்பன் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நாடோடிகள் படம்
பார்த்த பிறகு நண்பர்களின் மீது நெருக்கம் அதிகமானது...
நாயகன் ச சிகுமார் தன் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடித்த இந்த
சுந்தர பாண்டியன் நண்பர்களை சந்தேகப் பட வைக்கிறான்...
ஒரு பெண்ணுக்காக மூன்று நண்பர்கள் சேர்ந்து, அந்த மூன்று
நண்பர்கள் மீது அதிக நம்பிக்கை, பாசம் வைத்திருக்கும் நண்பனுக்கு செய்யும் துரோகம்
தான் இந்த சுந்தரபாண்டியன் படத்தின் ஒன் லைன்....
ஓபனிங்லே உசிலம்பட்டி காரங்க பற்றி
சொல்லிவிடுவதால் , ஹூரோ ஹூரோயினை லவ்வும் போதே நமக்கு ச சிகுமார் எப்படி அவர்களை
சமாளிப்பார் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு வந்து விடுகிறது...
ச சிகுமார் ரஜினி ரசிகனாக வருகிறார்.
இதற்காக அவர் பண்ணும் ஸ்டைல்கள் ரஜினியை ஞாபகப்படுத்துகின்றன.
முதன் முதலாக காதல் சொல்லும் இடம்,
கடைசியாக காதல் சொல்லும் இடம், இவ்விடங்களில் அவரின் உடை நாகரிகம் அருமை..
நண்பனின் காதல் செட் செய்ய அவர் தரும்
ஐடியாக்கள் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமானது.
ஹீரோயின் புதுமுகம், இதை மறைக்கும் இவரின்
நடிப்பு திறமை அபாரம். இடது கண்ணுக்கு கீழ் இருக்கும் தழும்பு தான் அவரின் அழகை
கெடுக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ இவர் இதயத்தில் இடம் பெற அதை அவரின் முகமே
காட்டி கொடுப்பது அருமை.
காதலை காதலினிடம் தைரியாமாக
சொல்லும் போதும், அப்பா காதலுக்கு சம்மதம் சொல்லும் போதும், அம்மா சித்தி
இருக்கும் போது தைரியமாக காதலனுக்கு போனில் பேசும் போது ரசிக்க வைக்கிறார்.
ஹீரோவின் நண்பர்கள் அவர் அவர் வேலைய
கச்சிதமாக செய்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் கோபத்தை அப்புகுட்டி
அழகாக வெளிகாட்டுகிறார்.. அவரிடம் ச சிகுமார் பஸ்ஸில் சண்டை போடுவது ஹீரோவின்
ரெளடியிசத்தை காட்டுகிறது. ஒரு அப்பாவியை அப்படியா பேருந்தில் அத்தனை பேர்
சேர்ந்து அடிப்பது.
ஒரு நண்பன் செய்யும் துரோகத்துக்கு
சொல்லும் காரணம் ஏற்க கூடியதாக இருக்கிறது-அது தன் நண்பனை கொலை செய்தவனை
பழிவாங்குவது-ஓகே.
அந்த ஹீரோயினியின் அக்கா புருஷன் தம்பி
ஹீரோவுக்கு நண்பன் எனச் சொல்லி, இவரும் ஹீரோவுக்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள
முடியாது. ஏனென்றால், அவர் ஹீரோவை கொல்ல முடிவு செய்வதே ஒரு நண்பனா இருந்து கொண்டு
தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்து நினைத்து தான்.
ஆனால் இவரும் ஹீரோவும் சந்திக்கிற மாதிரி
படத்தில் ஒரே காட்சி மட்டும் தான் வைத்திருக்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் சீன்
வைத்திருக்கலாம்.
சின்ன வயதில் இருந்தே ஒன்றாக இருக்கும்
மற்றொரு நண்பன் கிளைமேக்ஸில் எடுக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போது இந்த
முடிவு எடுத்த்தற்கு பதில் ஹீரோயின் ஹீரோவை காதலிப்பதாக ஹீரோ இவரிடம் சொல்லும்
போதே எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்... ஹீரோ நண்பர்களுக்கு உதவக்கூடிய ஆள்
என்பதால் பலன் கிடைத்திருக்கும்.. கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இயக்குனர்
மாற்றிவிட்டார் போல.
பொதுவா ஜெயிலுக்கோ இல்ல போலிஸ் ஷ்டேசனுக்கோ
போயிட்டு வந்தா வீட்டுக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே தலைக்கு எண்ணெய் தேய்த்து
குளித்துவிட்டு தான் செல்லுவார்கள். ஆனால் படத்தில் இத்தனை பெருசுங்க இருந்தும்
சுந்தர பாண்டியனை வீட்டில் விட்டு ஆற அமர அழுதுவிட்டு அப்புறம் சுந்தர பாண்டியன்
அப்பா சொன்னதுக்கு பிறகு தான் செய்கிறார்கள்.
ஹீரோவுக்கு தலையில் பலமாக அடி விழுகிறது
,பின் எல்லாம் சுபமாக முடிகிறது. ஆனால் தலையில் இவ்வளவு பலமாக அடிவிழுந்து
இருக்கிறதே இது எதிர்காலத்தில் ஹீரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துகிறதா
இல்லையா என்பதை தெளிவாக சொல்லவில்லை.
தன் மகளுக்கா தான் ஹீரோ ஜெயிலுக்கு போனதால்
அவருக்கு பெண் தர சம்மதிக்கும் பெண்ணின் அப்பா, ஏன் மாப்பிள்ளைக்கு எந்த வேலையும்
இல்லை என்பதை பற்றி கவலை படவில்லை.
மாப்பிள்ளைக்கோ எந்த தொழிலும் இல்லை, ஆனால்
கல்யாணம் ஆனதும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போறார் என்பதை தெளிவாக
சொல்லவில்லை.. எங்கயோ போறாங்க......
படத்திற்கு
நன்மைகள்
படம் ஆரம்பித்த்தில் இருந்து முடியும் வரை
எதிர்பார்ப்போடு நம்மை வைத்திருப்பது..
முதல் பாதி முழுவதும் வரும் காதல்
கலாட்டாக்கள், முக்கியமாக அந்த பஸ்ஸில் நடக்கும் காதல் கூத்துக்கள்..
விறுவிறுப்பான திரைக்கதை..
ச சிகுமாரின் காமெடி கலாட்டா பிளஸ் காதல்
காட்சிகள்....
நாடோடிகள் போல நண்பர்களின் கதை.....
இடைவேளைக்கு பிறகு வரும் திருப்பங்கள்....
ச சிகுமார் அண்ட் நண்பர்கள் செய்யும்
காமெடி காட்சிகள்...
படத்திற்கு
எதிரான தீமைகள்:
ஓபனிங் பாடல் தவிர மற்றவை
சொல்லும் படியாக இல்லை..
ஹீரோ ஹீரோயின் டூயட் சாங் நல்லா
கண்கள் இரண்டால் மாதிரி காதலோடு இல்லாமல் இருப்பது...
பிண்ணனி இசை சுத்த மோசம்..
கொஞ்சம் கூட நல்லா இல்லை... கிளைமேக்ஸ் பைட்டில் எப்படி பின்னி பெடலெடுத்து
இருக்கலாம்.. யாருப்பா இசை அமைத்தவர்
போங்கபா வேஸ்ட் பண்ணிட்டிங்க...
படத்தை பற்றிய விளம்பரம்
குறைவு... போஸ்டர் கூட குறைவாகத்தான் ஒட்டியிருக்கிறார்கள்...
சரியாக விளம்பரம் படுத்த படாத
இந்த படத்தை திருவண்ணாமலையில் உள்ள இரண்டு முக்கிய தியேட்டரிகளிலும் போட்டது....
தீர்ப்பு:
சுந்தரபாண்டியன் அனைத்து
தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது..
படம் சூப்பர் சூப்பர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக