செவ்வாய், 22 மே, 2012

மின் ஊழியரின் அராஜகம்..... நேரடி ரிப்போர்ட்.



இன்று காலை பிளஸ் டூ முடிவுகள் வெளியானது. வழக்கமா பத்தாவது பிளஸ் டூ போன்ற பொதுத்தேர்வுகளை காலை பத்து மணிக்கு தான் வெளிடுவாங்க. ஆனா இந்த வருசம் வித்தியாசமா காலை பதினோரு மணிக்குதான் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்கள். இது தெரியாமல் காலை எழுந்து பல்லை கூட விளக்காமல் தேர்வு முடிவுகளை பார்க்க இன்டர்நெட்டை ஓபன் செய்து ரிஜிஸ்டர் நம்பர்லாம் கொடுத்து எண்டர் கொடுத்தால ரிசல்ட் அன்நவுன் என வந்த து.
என்னடா இது வழக்கமா ஒன்பது மணிக்கு கட் ஆகுற கரண்ட் கூட இன்னிக்கி கட் ஆகல. ஆனா இன்னும் ரிசல்ட் வரலையேனு கடுப்பானேன். சரி எழுந்து பல்ல கூட வுட்காந்து இருக்கோமே போய் பல்ல விளக்கிட்டு காபி குடிச்சிட்டு வந்து பார்க்கலாமேனு கிளம்பி சென்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்து பார்த்தபோதுதான் நான் அந்த உண்மையை புரிந்துகொண்டேன்.
என்னை நானே திட்டிகொண்டு இருக்கும்போது பவர்கட் ஆனது. பவர் கட் ஆகும்போது சரியாக மணி பத்தே முக்கால். வழக்கமா கரண்ட் கட் ஆகிற நேரம் இல்லையாதலால் உடனடியாக வந்துவிடும் என எண்ணி சிஸ்டமை ஷட்டவன் செய்துவிட்டு காலை நாளிதழ் படிக்க ஆரம்பித்தேன். மணி பதிணொன்று, பதிணொன்னேகால் ஆகியும்  பவர் வரலை சரி பவர் ஷ்டாரை காண்டாக்ட் பண்ணலாம் என்றாலும் மொபைலில சார்ஜ் வேறு இல்லை. என்ன இன்னிக்கி எவ்வளோ முக்கியமான நாள் இன்னிக்கி போய் இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்களே என்ற வருத்த்த்துடன், என் அப்பா மூலம் ஈபி யை காண்டாக்ட் செய்து கேட்டபோதுதான் புது மாமியாரின் வில்லங்கம் புரிந்த து.
அதாவது என்ன ன்னா வழக்கமா பகல் பணிக்கு வரும் நபர் இன்று வரவில்லையாம். அதுமட்டும் இல்லாமல் எந்த ஒரு தகவலையும் கொடுக்கலையாம். இதனால் சர்க்கில் அதிகாரி இரவுப்பணி பார்த்தவரை ஒரு ஒருமணிநேரம் சேர்த்து பார்க்க சொல்லி இருக்கார். அவரும் இந்த டீலிங்குக்கு ஒப்புக்கொண்டு பணியை தொடர்ந்கிருக்கார். ஆனால் மணி பதினொன்றை நெருங்கியும் ஆள் வராத்தால் அவரு ரொம்ப கடுப்பு ஆகி பத்தே முக்காலுக்கெல்லாம் கரண்ட்டை கட் செய்துவிட்டு டாஷ்மார்கை ஏற்றிக்கொண்டு படுத்துவிட்டார்.
இதை அலுவலக ஊழியர் ஒருவர் எஸ் எஸுக்கு சென்றுபார்த்து விட்டு வந்து சொன்னது. எங்க ஊர் கிராம ம் என்பதால் யாரும் எதையும் கண்டுக்கவில்லை. இதனால் மிகவும் இன்று கஷ்டப்பட்டது பிளஸ் டூ பசங்கதான். ஒரு வழியா கரண்ட் வந்த பிறகு ரிசல்ட் பார்த்தேன். மூணு பாடம் புட்டுக்கிச்சி.  சத்தமில்லாமல் சம்பந்தபட்டவருக்கு போன் மூலம் தகவல் சொல்லிவுட்டு போனை ஸ்வுட்ச் ஆப் செய்துவிட்டு சிபி செந்தில் அண்ணாவின் சென்னை மெகா டுவிட் டப் படிக்க சென்றுவிட்டேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக