திங்கள், 21 மே, 2012

நாய் வளர்த்தால் அபராதமா ?

இன்று கலை ஒரு  பிரபல நாளிதழில்
வெளிவந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும்  ஆச்சரியத்தையும் தந்தது . 
மிக முக்கியமான செய்தி என்பதால் படுக்கையில்  இருந்த படியே படித்தேன். 
 இத்தாலி அரசாங்கம்  மாநகர் மற்றும் நகரபகுதி வளர்ச்சிக்காக நிதி திரட்டும்
நோக்கத்தில்
நாய்கள், பூனைகளுக்கு புதிய வரி விதிக்க தீர்மானித்து இருக்கிறது .  பாராளுமன்ற ஆலோசனை குழு இந்த முடிவை அறிவித்து இருப்பதாகவும் ,
இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும்  எதிர்ப்பும் கிளம்பி இருப்பதாகவும் , இதனை அறிந்த இத்தாலி அரசாங்கம்  உடனடியாக அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுவிட்டதாகவும் சொல்லியது அந்த
நாளிதழ்.

நல்ல வேலை இந்த மாதிரியான கேணத்தனமான அறிவிப்பை நம்ம ஊர் வெள்ளை வேட்டி நாட்டாமைகள் யாரும் சொல்லவில்லை. இதனால் இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாக நாங்கள் நாய் வளர்ப்பில் ஈடுபடலாம் .
ஏன்னா அவங்களை போல நமக்குள் எந்த ஒரு ஒற்றுமையும் கிடையாது .
ரோட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என சிவனேன்னு நடந்து செல்லும்
 நாயை கண்டாலே  கல்லெறியும் நம் மக்களை இந்த மாதிரி எந்த அறிவிப்பு வெளியானாலும் ஒன்னும்
செய்ய முடியாது. நமக்கென்ன அது நாய் வளர்க்கிரவங்களுக்கும் அவங்களுக்கும் உள்ள பிரச்சினை
என சொல்லி அவன்காவங்க வேலையை பார்க்க போய்டுவாங்க .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக