எங்கள்
திங்கள், 24 செப்டம்பர், 2012
ஞாயிறு, 23 செப்டம்பர், 2012
திங்கள், 17 செப்டம்பர், 2012
சுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம்
சுந்தர பாண்டியன் – நண்பர்களின் துரோகம்
நாயகன் ச சிகுமார், நண்பன் சமுத்திரக்கனி இயக்கத்தில் நடித்த நாடோடிகள் படம் பார்த்த பிறகு நண்பர்களின் மீது நெருக்கம் அதிகமானது...
நாயகன் ச சிகுமார் தன் உதவி இயக்குனரின் இயக்கத்தில் நடித்த இந்த சுந்தர பாண்டியன் நண்பர்களை சந்தேகப் பட வைக்கிறான்...
ஒரு பெண்ணுக்காக மூன்று நண்பர்கள் சேர்ந்து, அந்த மூன்று நண்பர்கள் மீது அதிக நம்பிக்கை, பாசம் வைத்திருக்கும் நண்பனுக்கு செய்யும் துரோகம் தான் இந்த சுந்தரபாண்டியன் படத்தின் ஒன் லைன்....
ஓபனிங்லே உசிலம்பட்டி காரங்க பற்றி சொல்லிவிடுவதால் , ஹூரோ ஹூரோயினை லவ்வும் போதே நமக்கு ச சிகுமார் எப்படி அவர்களை சமாளிப்பார் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு வந்து விடுகிறது...
ச சிகுமார் ரஜினி ரசிகனாக வருகிறார். இதற்காக அவர் பண்ணும் ஸ்டைல்கள் ரஜினியை ஞாபகப்படுத்துகின்றன.
முதன் முதலாக காதல் சொல்லும் இடம், கடைசியாக காதல் சொல்லும் இடம், இவ்விடங்களில் அவரின் உடை நாகரிகம் அருமை..
நண்பனின் காதல் செட் செய்ய அவர் தரும் ஐடியாக்கள் நிஜ வாழ்க்கைக்கும் பொருத்தமானது.
ஹீரோயின் புதுமுகம், இதை மறைக்கும் இவரின் நடிப்பு திறமை அபாரம். இடது கண்ணுக்கு கீழ் இருக்கும் தழும்பு தான் அவரின் அழகை கெடுக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ இவர் இதயத்தில் இடம் பெற அதை அவரின் முகமே காட்டி கொடுப்பது அருமை.
காதலை காதலினிடம் தைரியாமாக சொல்லும் போதும், அப்பா காதலுக்கு சம்மதம் சொல்லும் போதும், அம்மா சித்தி இருக்கும் போது தைரியமாக காதலனுக்கு போனில் பேசும் போது ரசிக்க வைக்கிறார்.
ஹீரோவின் நண்பர்கள் அவர் அவர் வேலைய கச்சிதமாக செய்துள்ளனர். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் கோபத்தை அப்புகுட்டி அழகாக வெளிகாட்டுகிறார்.. அவரிடம் ச சிகுமார் பஸ்ஸில் சண்டை போடுவது ஹீரோவின் ரெளடியிசத்தை காட்டுகிறது. ஒரு அப்பாவியை அப்படியா பேருந்தில் அத்தனை பேர் சேர்ந்து அடிப்பது.
ஒரு நண்பன் செய்யும் துரோகத்துக்கு சொல்லும் காரணம் ஏற்க கூடியதாக இருக்கிறது-அது தன் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்குவது-ஓகே.
அந்த ஹீரோயினியின் அக்கா புருஷன் தம்பி ஹீரோவுக்கு நண்பன் எனச் சொல்லி, இவரும் ஹீரோவுக்கு துரோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் ஹீரோவை கொல்ல முடிவு செய்வதே ஒரு நண்பனா இருந்து கொண்டு தனக்கு துரோகம் செய்து விட்டதாக நினைத்து நினைத்து தான்.
ஆனால் இவரும் ஹீரோவும் சந்திக்கிற மாதிரி படத்தில் ஒரே காட்சி மட்டும் தான் வைத்திருக்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் சீன் வைத்திருக்கலாம்.
சின்ன வயதில் இருந்தே ஒன்றாக இருக்கும் மற்றொரு நண்பன் கிளைமேக்ஸில் எடுக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போது இந்த முடிவு எடுத்த்தற்கு பதில் ஹீரோயின் ஹீரோவை காதலிப்பதாக ஹீரோ இவரிடம் சொல்லும் போதே எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம்... ஹீரோ நண்பர்களுக்கு உதவக்கூடிய ஆள் என்பதால் பலன் கிடைத்திருக்கும்.. கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டுக்காக இயக்குனர் மாற்றிவிட்டார் போல.
பொதுவா ஜெயிலுக்கோ இல்ல போலிஸ் ஷ்டேசனுக்கோ போயிட்டு வந்தா வீட்டுக்கு உள்ள போறதுக்கு முன்னாடியே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு தான் செல்லுவார்கள். ஆனால் படத்தில் இத்தனை பெருசுங்க இருந்தும் சுந்தர பாண்டியனை வீட்டில் விட்டு ஆற அமர அழுதுவிட்டு அப்புறம் சுந்தர பாண்டியன் அப்பா சொன்னதுக்கு பிறகு தான் செய்கிறார்கள்.
ஹீரோவுக்கு தலையில் பலமாக அடி விழுகிறது ,பின் எல்லாம் சுபமாக முடிகிறது. ஆனால் தலையில் இவ்வளவு பலமாக அடிவிழுந்து இருக்கிறதே இது எதிர்காலத்தில் ஹீரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை தெளிவாக சொல்லவில்லை.
தன் மகளுக்கா தான் ஹீரோ ஜெயிலுக்கு போனதால் அவருக்கு பெண் தர சம்மதிக்கும் பெண்ணின் அப்பா, ஏன் மாப்பிள்ளைக்கு எந்த வேலையும் இல்லை என்பதை பற்றி கவலை படவில்லை.
மாப்பிள்ளைக்கோ எந்த தொழிலும் இல்லை, ஆனால் கல்யாணம் ஆனதும் மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு எங்கு போறார் என்பதை தெளிவாக சொல்லவில்லை.. எங்கயோ போறாங்க......
படத்திற்கு நன்மைகள்
படம் ஆரம்பித்த்தில் இருந்து முடியும் வரை எதிர்பார்ப்போடு நம்மை வைத்திருப்பது..
முதல் பாதி முழுவதும் வரும் காதல் கலாட்டாக்கள், முக்கியமாக அந்த பஸ்ஸில் நடக்கும் காதல் கூத்துக்கள்..
விறுவிறுப்பான திரைக்கதை..
ச சிகுமாரின் காமெடி கலாட்டா பிளஸ் காதல் காட்சிகள்....
நாடோடிகள் போல நண்பர்களின் கதை.....
இடைவேளைக்கு பிறகு வரும் திருப்பங்கள்....
ச சிகுமார் அண்ட் நண்பர்கள் செய்யும் காமெடி காட்சிகள்...
படத்திற்கு எதிரான தீமைகள்:
ஓபனிங் பாடல் தவிர மற்றவை சொல்லும் படியாக இல்லை..
ஹீரோ ஹீரோயின் டூயட் சாங் நல்லா கண்கள் இரண்டால் மாதிரி காதலோடு இல்லாமல் இருப்பது...
பிண்ணனி இசை சுத்த மோசம்.. கொஞ்சம் கூட நல்லா இல்லை... கிளைமேக்ஸ் பைட்டில் எப்படி பின்னி பெடலெடுத்து இருக்கலாம்.. யாருப்பா இசை அமைத்தவர் போங்கபா வேஸ்ட் பண்ணிட்டிங்க...
படத்தை பற்றிய விளம்பரம் குறைவு... போஸ்டர் கூட குறைவாகத்தான் ஒட்டியிருக்கிறார்கள்...
சரியாக விளம்பரம் படுத்த படாத இந்த படத்தை திருவண்ணாமலையில் உள்ள இரண்டு முக்கிய தியேட்டரிகளிலும் போட்டது....
தீர்ப்பு:
சுந்தரபாண்டியன் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் உள்ளது..
படம் சூப்பர் சூப்பர்
திங்கள், 13 ஆகஸ்ட், 2012
பர்வதமலை-திருவண்ணாமலை
பர்வதமலை | |||
திருவண்ணாமலையிலிருந்து சேலம் செல்லும் சாலையிலுள்ள செங்கம் சென்று அங்கிருந்து ஒரு கிராமம்(பெயர் மறந்துவிட்டது. தென்மாதிமங்கலம் என்று ஞாபகம்...) சென்று அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் காட்டு வழிதனில் நடந்து சென்று பார்த்தால் தூரத்தே உயரமாக நிமிர்ந்து சூழ்ந்திருக்கும் பல மலைகளுக்கு நடுவே தனித்துக் காட்சி தருவது பர்வதமலை.
மலையின் உச்சிப்பகுதிக்கு வந்துவிட்டோம்.பெரும் கற்பாறைகள். ஏறுவதற்குப் பாதை இல்லை. கடப்பாரைக் கம்பிகளைச் செருகிச் செருகி படிபோல் அமைத்திருந்தார்கள்.அதைப்பிடித்துக் கொண்டே பையப்பைய ஏறவேண்டும். காற்று வேறு, கட்டியிருந்த வேட்டியைப் பிடுங்கியே தீருவதென்று பிடிவாதமாக இருந்தது. தோளில் தொங்கப்போட்டிருந்த பயணப்பையும் வேறு தொந்தரவாக இருந்தது.முதுகில் மாட்டிக்கொண்டேன். |
வியாழன், 19 ஜூலை, 2012
குடியரசு தலைவரின் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றிய ஒரு பார்வை
இந்தியாவின் முதல் குடிமகன், நாட்டின் உயரிய பொறுப்பாக கருதப்படும் குடியரசு தலைவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்கள், அவரின் பொறுப்புகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
பிரிட்டன் அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சங்களை தன்னகத்தே கொண்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, குடியரசு தலைவர் பதவி, பிரிட்டன் அரசருக்கு நிகரானது. இந்திய அரசின் தலைமை நிர்வாகியான குடியரசு தலைவரின் பெயரில் தான் மத்திய அரசு இயங்குகிறது. மேலும் குடியரசு தலைவர் முப்படைகளின் தலைவராகவும் இருப்பார்.
பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றே மத்திய அரசு, நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்களை நியமிக்கவும், நீக்கவும் செய்கிறது.
நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகே சட்டமாகிறது.
முக்கிய ஒப்புந்தங்களுக்கும் குடியரசு தலைவரின் ஒப்புதல் தேவை. கைதிகளின் தண்டனையை குறைக்கவும், தண்டனையை ரத்து செய்யவும் குடியரசு தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு. மத்திய அரசையும், மாநில அரகளையும் நீக்கும் அதிகாரமும் குடியரசு தலைவருக்கு உள்ளது.
குடியரசு தலைவரின் பெயரால் மத்திய அரசு செயல்பட்டாலும், தனியாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் அவருக்கு இல்லை. சட்டங்கள் இயற்றுவது முதல் அரசின் முடிவுகள் அனைத்துமே அமைச்சரவையை சார்ந்ததே. அதே சமயம், மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நேரங்களில் குடியரசு தலைவரின் முடிவு முக்கியமானது.
அரசு அமைக்க உரிமை கோருபவர்களில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை முடிவு செய்வதில் குடியரசு தலைவரின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. தேர்தல் முடிந்து எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் குடியரசு தலைவர் முக்கியமான முடிவை எடுத்த வரலாற்று பதிவுகளும் இந்தியாவில் உண்டு.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைமை பொறுப்பு என்ற பெருமையையும் குடியரசு தலைவர் பெற்றிருக்கிறார்.
ஞாயிறு, 15 ஜூலை, 2012
பில்லா டேவிட் பில்லா - பில்லா 2 விமர்சனம்..
பில்லா டேவிட் பில்லா - பில்லா 2 விமர்சனம்..
பிளிஷ் உங்க பொன்னான நேரத்தை இந்த படத்துக்காக வீணாக்க வேண்டாம்...
படம் பார்க்க உள்ளே நழையும் போது இருக்கும் சந்தோசம் மன நிம்மதி படம் முடியும் போது இல்லை...
தல வலி கழுத்து வலி தான் வருது...
டி்க்கெட் 70 ரூபா தல வலி கழுத்து வலி மாத்திரைக்கு 150 ரூபா செலவு இவ்ளோ செலவு பண்ணதுக்கு அப்புறம்தான் வலி எல்லாம் போச்சி.....
படம் சின்ன படம்ங்க... இரண்டு மணிநேரம்தான் ஓடுது...
படம் போட்டதுல இருந்து தல அஐித் சுட்டுகிட்டே இருக்காருங்க... எத்தனை பேர சுட்டார் என்பதை நம்ம செந்தில் அண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்...
படம் முடிஞ்சுதுனு தியேட்டர் காரன் லைட் போட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்தது.... எழுந்து வெளியே வந்து கேட்ட தாண்டும் போது கூட டுமில் டுமில்னு சுடர சத்தம் கேட்குதுங்க இவங்க இம்ச தாங்க முடியல....
படத்தோட கத நல்லா தான் ஆர்வமா இருக்கு.. ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா விரிவா சொல்லி இருக்கலாம்...
டேவிட் பில்லா எப்படி இன்டர்போல் தேடும் மிகப்பெரிய டான் ஆகுறான் என்பதுதான் கதை....
நிறைய எதிர்பார்த்து போனேன் ஏமாந்து வந்தேன்.....
இன்று காலைக் காட்சிக்கே தியேட்டரில் கூட்டம் இல்லை.. இத்தனைககும் இன்று படம் வெளியான மூன்றாவது நாள்...
நான் பில்லா 1 யும் இதே மூன்றாவது நாள் காலைக்காட்சிதான் பார்த்தேன்.. செம கூட்டம்....
தியேட்டருக்கு கூட்டத்தை வரவைக்க இரண்டு வழிதான் இருக்கு
1. பில்லா 2 ஓடும் தியேட்டர் கேண்டினில் இனி தலைவலி மாத்திரை இலவசமாக கொடு்க்கப்படு்ம்னு அறிவிக்கலாம்...
2. சென்சாரில் கட் பண்ண சீன்களை இடைவேளையில் ஒளிபரப்பலாம்...
பாடல்கள் ஒனறு கூட நல்லா இல்லை... கேங்ஸ்டர் பாடலை நான் நிறைய எதிர்பார்த்தேன்... படத்தில் அந்த பாட்டே இல்லை.. படம் முடிந்த பிறகு தான் ஒளிபரப்புகிறார்கள்...
பிண்ணனி இசை சுமார்......
ஒளிப்பதிவு.. வசனம்.... எடிட்டிங் ... சூப்பர்
அஐித் ஸ்டைல் நச்.....
திருவண்ணாமலையில் 4 தியேட்டரிகளில் ஓடுகிறது... கூட்டத்த தான் காணோம்.....
பிளிஷ் உங்க பொன்னான நேரத்தை இந்த படத்துக்காக வீணாக்க வேண்டாம்...
படம் பார்க்க உள்ளே நழையும் போது இருக்கும் சந்தோசம் மன நிம்மதி படம் முடியும் போது இல்லை...
தல வலி கழுத்து வலி தான் வருது...
டி்க்கெட் 70 ரூபா தல வலி கழுத்து வலி மாத்திரைக்கு 150 ரூபா செலவு இவ்ளோ செலவு பண்ணதுக்கு அப்புறம்தான் வலி எல்லாம் போச்சி.....
படம் சின்ன படம்ங்க... இரண்டு மணிநேரம்தான் ஓடுது...
படம் போட்டதுல இருந்து தல அஐித் சுட்டுகிட்டே இருக்காருங்க... எத்தனை பேர சுட்டார் என்பதை நம்ம செந்தில் அண்ணனிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்...
படம் முடிஞ்சுதுனு தியேட்டர் காரன் லைட் போட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியா இருந்தது.... எழுந்து வெளியே வந்து கேட்ட தாண்டும் போது கூட டுமில் டுமில்னு சுடர சத்தம் கேட்குதுங்க இவங்க இம்ச தாங்க முடியல....
படத்தோட கத நல்லா தான் ஆர்வமா இருக்கு.. ஆனா இன்னும் கொஞ்சம் தெளிவா விரிவா சொல்லி இருக்கலாம்...
டேவிட் பில்லா எப்படி இன்டர்போல் தேடும் மிகப்பெரிய டான் ஆகுறான் என்பதுதான் கதை....
நிறைய எதிர்பார்த்து போனேன் ஏமாந்து வந்தேன்.....
இன்று காலைக் காட்சிக்கே தியேட்டரில் கூட்டம் இல்லை.. இத்தனைககும் இன்று படம் வெளியான மூன்றாவது நாள்...
நான் பில்லா 1 யும் இதே மூன்றாவது நாள் காலைக்காட்சிதான் பார்த்தேன்.. செம கூட்டம்....
தியேட்டருக்கு கூட்டத்தை வரவைக்க இரண்டு வழிதான் இருக்கு
1. பில்லா 2 ஓடும் தியேட்டர் கேண்டினில் இனி தலைவலி மாத்திரை இலவசமாக கொடு்க்கப்படு்ம்னு அறிவிக்கலாம்...
2. சென்சாரில் கட் பண்ண சீன்களை இடைவேளையில் ஒளிபரப்பலாம்...
பாடல்கள் ஒனறு கூட நல்லா இல்லை... கேங்ஸ்டர் பாடலை நான் நிறைய எதிர்பார்த்தேன்... படத்தில் அந்த பாட்டே இல்லை.. படம் முடிந்த பிறகு தான் ஒளிபரப்புகிறார்கள்...
பிண்ணனி இசை சுமார்......
ஒளிப்பதிவு.. வசனம்.... எடிட்டிங் ... சூப்பர்
அஐித் ஸ்டைல் நச்.....
திருவண்ணாமலையில் 4 தியேட்டரிகளில் ஓடுகிறது... கூட்டத்த தான் காணோம்.....
வெள்ளி, 6 ஜூலை, 2012
பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்:சுப.வீ விழாவில் கலைஞர்
புத்தக வெளியீட்டு விழாக்கள் என்பவை அரசியல் பரபரப்புக்கிடையே தனக்குக் கிடைக்கும் இளைப்பாறல் என்று சொல்வார் கலைஞர்.
2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த மே 15ந் தேதி, கலைஞருக்கு கூடுதல் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வகையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது பேராசிரியர் சுப.வீ எழுதிய வானவில் புத்தகாலயத்தின் 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா.
2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த மே 15ந் தேதி, கலைஞருக்கு கூடுதல் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வகையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது பேராசிரியர் சுப.வீ எழுதிய வானவில் புத்தகாலயத்தின் 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா.
திராவிடத்தால்
எழுந்தோம் என்ற வரலாறு, குறள் வானம் என்ற இலக்கியம், கவிதா என்ற நாவல்,
வந்ததும் வாழ்வதும் என்ற சுயசரிதை, பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்
என்ற தத்துவ விளக்கம் என 5 வகை புத்தகங்களைக் கலைஞர் வெளியிட, மத்திய
இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.
வழக்கம்போலவே
வைணவத் தமிழ்ப்பாடல்களைக் கலைஞர் பாசுரங்களாக்கி பாராட்டைக் கொட்டி,
அரங்கத்திலிருந்தவர்களின் கைதட்டல்களை அள்ளினார் ஜெகத்ரட்சகன்.
புத்தகங்களைப் பற்றி பேசச்சொல்லுங்க என்று மேடையிலிருந்தவர்களிடம் தெரிவித்தார் கலைஞர். பேராசிரியர் அப்துல்காதர், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரின் உரைக்குப் பிறகு, நட்பின் அடிப்படையில் மேடைக்கு வந்த கவிஞர் வைரமுத்து, கல்லூரிக் காலத்திலிருந்து தனக்கும் சுப.வீக்குமான நட்பையும் அவரது கொள்கைப் பற்றையும் எடுத்துக் கூறினார்.
புத்தகங்களைப் பற்றி பேசச்சொல்லுங்க என்று மேடையிலிருந்தவர்களிடம் தெரிவித்தார் கலைஞர். பேராசிரியர் அப்துல்காதர், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரின் உரைக்குப் பிறகு, நட்பின் அடிப்படையில் மேடைக்கு வந்த கவிஞர் வைரமுத்து, கல்லூரிக் காலத்திலிருந்து தனக்கும் சுப.வீக்குமான நட்பையும் அவரது கொள்கைப் பற்றையும் எடுத்துக் கூறினார்.
திராவிட
இயக்கம் தனது நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களையும், இதை
இப்படியேவிட்டால் மீண்டும் நம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சைக்
குத்திவிடும் ஆரியம் என்றும் அண்மைக்கால பத்திரிகை செய்திகளை ஆவணங்களாக
எடுத்துவைத்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
இது
எனது 27 ஆண்டுகால கனவு என நெகிழ்ச்சியுடன் ஏற்புரையாற்றிய சுப.வீ, திராவிட
இயக்கத்திற்காக உழைக்கவேண்டும் என்பதைத்தவிர வேறெந்த எதிர்பார்ப்பும்
இல்லை என்றார் நன்றிப்பெருக்குடன்.
கலைஞரின்
சிறப்புரை முழுவதும் தமிழீழம் பற்றியே அமைந்திருந்தது. விரைவில்
சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்த கலைஞர், பிரதமராக
ராஜீவ் இருந்தபோது தன்னை டெல்லிக்கு அழைத்து, பிரபாகரனை brave man என்று
குறிப்பிட்டதுடன் நீங்களும் மாறனும் வைகோவும் கொழும்புக்குச் சென்று
அங்குள்ள நிலவரங்களைச் சொல்லுங்கள்.
தமிழீழம்
அமைய நான் உதவுகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்ததையும், பின்னர் அந்த
வாய்ப்பு தவறிப்போனதற்கான காரணங்களை இப்போது சொல்லி விவகாரமாக்கவில்லை
என்றார். தமிழீழம் அமைவதற்காக அறவழியில் டெசோ அமைப்பு தொடர்ந்து போராடும்
என்று தன் பேச்சை நிறைவு செய்தார் கலைஞர்.
விழா முடிந்து வெளியேறிய பார்வையாளர்கள் பலரது கைகளிலும் சுப.வீயின் திராவிடத்தால் எழுந்தோம் என்ற புத்தகத்தைக் காண முடிந்தது.
thanks nakkheeran ilakkiyam
செவ்வாய், 22 மே, 2012
மின் ஊழியரின் அராஜகம்..... நேரடி ரிப்போர்ட்.
இன்று காலை பிளஸ் டூ முடிவுகள்
வெளியானது. வழக்கமா பத்தாவது பிளஸ் டூ போன்ற பொதுத்தேர்வுகளை காலை பத்து மணிக்கு
தான் வெளிடுவாங்க. ஆனா இந்த வருசம் வித்தியாசமா காலை பதினோரு மணிக்குதான் தேர்வு
முடிவுகளை வெளியிட்டார்கள். இது தெரியாமல் காலை எழுந்து பல்லை கூட விளக்காமல்
தேர்வு முடிவுகளை பார்க்க இன்டர்நெட்டை ஓபன் செய்து ரிஜிஸ்டர் நம்பர்லாம் கொடுத்து
எண்டர் கொடுத்தால ரிசல்ட் அன்நவுன் என வந்த து.
என்னடா இது வழக்கமா ஒன்பது மணிக்கு
கட் ஆகுற கரண்ட் கூட இன்னிக்கி கட் ஆகல. ஆனா இன்னும் ரிசல்ட் வரலையேனு
கடுப்பானேன். சரி எழுந்து பல்ல கூட வுட்காந்து இருக்கோமே போய் பல்ல விளக்கிட்டு
காபி குடிச்சிட்டு வந்து பார்க்கலாமேனு கிளம்பி சென்று எல்லா வேலைகளையும்
முடித்துவிட்டு வந்து பார்த்தபோதுதான் நான் அந்த உண்மையை புரிந்துகொண்டேன்.
என்னை நானே திட்டிகொண்டு
இருக்கும்போது பவர்கட் ஆனது. பவர் கட் ஆகும்போது சரியாக மணி பத்தே முக்கால். வழக்கமா
கரண்ட் கட் ஆகிற நேரம் இல்லையாதலால் உடனடியாக வந்துவிடும் என எண்ணி சிஸ்டமை
ஷட்டவன் செய்துவிட்டு காலை நாளிதழ் படிக்க ஆரம்பித்தேன். மணி பதிணொன்று,
பதிணொன்னேகால் ஆகியும் பவர் வரலை சரி பவர்
ஷ்டாரை காண்டாக்ட் பண்ணலாம் என்றாலும் மொபைலில சார்ஜ் வேறு இல்லை. என்ன இன்னிக்கி
எவ்வளோ முக்கியமான நாள் இன்னிக்கி போய் இப்படி கரண்ட் கட் பண்ணிட்டாங்களே என்ற
வருத்த்த்துடன், என் அப்பா மூலம் ஈபி யை காண்டாக்ட் செய்து கேட்டபோதுதான் புது
மாமியாரின் வில்லங்கம் புரிந்த து.
அதாவது என்ன ன்னா வழக்கமா பகல்
பணிக்கு வரும் நபர் இன்று வரவில்லையாம். அதுமட்டும் இல்லாமல் எந்த ஒரு தகவலையும்
கொடுக்கலையாம். இதனால் சர்க்கில் அதிகாரி இரவுப்பணி பார்த்தவரை ஒரு ஒருமணிநேரம்
சேர்த்து பார்க்க சொல்லி இருக்கார். அவரும் இந்த டீலிங்குக்கு ஒப்புக்கொண்டு பணியை
தொடர்ந்கிருக்கார். ஆனால் மணி பதினொன்றை நெருங்கியும் ஆள் வராத்தால் அவரு ரொம்ப
கடுப்பு ஆகி பத்தே முக்காலுக்கெல்லாம் கரண்ட்டை கட் செய்துவிட்டு டாஷ்மார்கை
ஏற்றிக்கொண்டு படுத்துவிட்டார்.
இதை அலுவலக ஊழியர் ஒருவர் எஸ்
எஸுக்கு சென்றுபார்த்து விட்டு வந்து சொன்னது. எங்க ஊர் கிராம ம் என்பதால் யாரும்
எதையும் கண்டுக்கவில்லை. இதனால் மிகவும் இன்று கஷ்டப்பட்டது பிளஸ் டூ பசங்கதான்.
ஒரு வழியா கரண்ட் வந்த பிறகு ரிசல்ட் பார்த்தேன். மூணு பாடம் புட்டுக்கிச்சி. சத்தமில்லாமல் சம்பந்தபட்டவருக்கு போன் மூலம்
தகவல் சொல்லிவுட்டு போனை ஸ்வுட்ச் ஆப் செய்துவிட்டு சிபி செந்தில் அண்ணாவின்
சென்னை மெகா டுவிட் டப் படிக்க சென்றுவிட்டேன்
திங்கள், 21 மே, 2012
நாய் வளர்த்தால் அபராதமா ?
இன்று கலை ஒரு பிரபல நாளிதழில்
வெளிவந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது .
வெளிவந்த செய்தி மிகவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது .
மிக முக்கியமான செய்தி என்பதால் படுக்கையில் இருந்த படியே படித்தேன்.
இத்தாலி அரசாங்கம் மாநகர் மற்றும் நகரபகுதி வளர்ச்சிக்காக நிதி திரட்டும்
நோக்கத்தில்
நாய்கள், பூனைகளுக்கு புதிய வரி விதிக்க தீர்மானித்து இருக்கிறது . பாராளுமன்ற ஆலோசனை குழு இந்த முடிவை அறிவித்து இருப்பதாகவும் ,
இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் கிளம்பி இருப்பதாகவும் , இதனை அறிந்த இத்தாலி அரசாங்கம் உடனடியாக அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுவிட்டதாகவும் சொல்லியது அந்த
நாளிதழ்.
நல்ல வேலை இந்த மாதிரியான கேணத்தனமான அறிவிப்பை நம்ம ஊர் வெள்ளை வேட்டி நாட்டாமைகள் யாரும் சொல்லவில்லை. இதனால் இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாக நாங்கள் நாய் வளர்ப்பில் ஈடுபடலாம் .
ஏன்னா அவங்களை போல நமக்குள் எந்த ஒரு ஒற்றுமையும் கிடையாது .
ரோட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என சிவனேன்னு நடந்து செல்லும்
நாயை கண்டாலே கல்லெறியும் நம் மக்களை இந்த மாதிரி எந்த அறிவிப்பு வெளியானாலும் ஒன்னும்
செய்ய முடியாது. நமக்கென்ன அது நாய் வளர்க்கிரவங்களுக்கும் அவங்களுக்கும் உள்ள பிரச்சினை
நோக்கத்தில்
நாய்கள், பூனைகளுக்கு புதிய வரி விதிக்க தீர்மானித்து இருக்கிறது . பாராளுமன்ற ஆலோசனை குழு இந்த முடிவை அறிவித்து இருப்பதாகவும் ,
இதனால் அந்த ஊர் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் கிளம்பி இருப்பதாகவும் , இதனை அறிந்த இத்தாலி அரசாங்கம் உடனடியாக அந்த அறிவிப்பை திரும்ப பெற்றுவிட்டதாகவும் சொல்லியது அந்த
நாளிதழ்.
நல்ல வேலை இந்த மாதிரியான கேணத்தனமான அறிவிப்பை நம்ம ஊர் வெள்ளை வேட்டி நாட்டாமைகள் யாரும் சொல்லவில்லை. இதனால் இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதியாக நாங்கள் நாய் வளர்ப்பில் ஈடுபடலாம் .
ஏன்னா அவங்களை போல நமக்குள் எந்த ஒரு ஒற்றுமையும் கிடையாது .
ரோட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என சிவனேன்னு நடந்து செல்லும்
நாயை கண்டாலே கல்லெறியும் நம் மக்களை இந்த மாதிரி எந்த அறிவிப்பு வெளியானாலும் ஒன்னும்
செய்ய முடியாது. நமக்கென்ன அது நாய் வளர்க்கிரவங்களுக்கும் அவங்களுக்கும் உள்ள பிரச்சினை
என சொல்லி அவன்காவங்க வேலையை பார்க்க போய்டுவாங்க .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)